Sunday, May 5, 2024
Home > அரசியல் > கம்யூனிஸ்டுகளை கதறவிட்ட பிஜேபி தலைவர் அண்ணாமலை..!

கம்யூனிஸ்டுகளை கதறவிட்ட பிஜேபி தலைவர் அண்ணாமலை..!

24-2-22/16.32pm

சென்னை : நடந்துமுடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கூட்டணியில்லாமல் தனித்து நின்று 308 இடங்களில் வென்று தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சியாக பிஜேபி உருவெடுத்துள்ளது. பிஜேபி தலைவர்கள் வேட்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் இந்த வெற்றியை கடந்து போய்க்கொண்டிருக்க திராவிட கட்சி தொண்டர்கள் மத்தியில் இன்னும் பேசுபொருளாய் இருக்கிறது பிஜேபியின் வெற்றி.

நாற்பது சதவிகித வேட்பாளர்களை மட்டுமே களமிறக்கி ஐந்து சதவிகித வாக்குகளை பெற்றிருக்கும் பிஜேபிக்கு பல்வேறு தரப்பிலிருந்து பாராட்டுக்கள் உள்ளன. பிரதமர் மோடி பிஜேபி தமிழக தலைவர் அண்ணாமலையை போனில் அழைத்து தனது பாராட்டுக்களை தெரிவித்தார். தேஜஸ்வி சூர்யா மற்றும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பல தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் வெற்றிக்குப்பின் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை கம்யூனிஸ்ட் கட்சி பற்றி கிண்டலாக விமர்சித்தார். ” ராகுல் நாங்க ஜெயிக்க மாட்டோம்னு சொன்னார். நாங்க ஜெயிச்சுட்டோம். இப்போ முத்தரசன் சொல்றாரு. நிஜமாவே அவர் கண்ணாடியை எடுத்து அவர் கட்சியை பார்க்கணும். அவர் எங்கே இருக்கிறார். கட்சி எங்கே இருக்கிறது என பார்க்க வேண்டும்.

`

கம்யூனிஸ்ட் கட்சி மக்களுக்கு என்ன செய்தது. திமுக கொடுக்கும் ஆக்சிஜனை வைத்துக்கொண்டு எத்தனை நாள் உயிர்வாழ முடியும். ஐசியூவில் படுத்துக்கொண்டு திமுக கொடுக்கும் ஆக்சிஜன் மாஸ்க்கை போட்டு சுவாசித்துக்கொண்டு இருக்கிறது.

```
```

கருத்து சொல்வதற்கு ஒரு தகுதி இருக்கவேண்டும் என்பது எனது தாழ்மையான கருத்து. அது அவர்களுக்கு இல்லை” என கம்யூனிஸ்டுகளை கந்தலாக்கிவிட்டார் பிஜேபி தலைவர் அண்ணாமலை.

…..உங்கள் பீமா