Thursday, April 18, 2024
Home > அரசியல் > அண்ணாமலை ஏமாற்றிக் கொள்கிறாரா..? பாண்டே விமர்சனம்..!

அண்ணாமலை ஏமாற்றிக் கொள்கிறாரா..? பாண்டே விமர்சனம்..!

25-2-22/10.32am

சென்னை : நடுநிலையான மூத்த பத்திரிக்கையாளர் மற்றும் 25 வருட அனுபவம் என கூறிக்கொள்ளும் ரங்கராஜ் பாண்டே தேசிய கட்சியான பிஜேபியின் மாநில தலைவர் அண்ணாமலையை விமர்சித்திருப்பது நெட்டிசன்களை கொந்தளிக்க வைத்திருக்கிறது.

நேற்று ரங்கராஜ் பாண்டே தனது யூ ட்யூப் சேனலில் வெளியிட்டிருந்த வீடியோவில் பிஜேபியின் வெற்றி குறித்து விமர்சனம் செய்திருந்தார். அதில் “நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளது தேர்தலில் பிஜேபி அமோக வெற்றி. இதை யார் சொன்னது என்றால் அவர்களே சொல்லிக்கொள்கிறார்கள். பிஜேபி தலைவர் அண்ணாமலையும் அதையே கூறுகிறார்.

சென்னையில் விஜய் மக்கள் இயக்கம் கூட இரண்டாம் இடத்தில் வந்திருக்கிறது”என கூறியவர் மேலும் பிஜேபியின் வெற்றியை வேறுகோணத்தில் விமர்சிக்கிறேன் பேர்வழி என கடைந்தெடுத்த திமுக பிரஜை போல பேசியிருப்பது பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிஜேபி தனிமனித துதி பாடுவதுபோலவும் அண்ணாமலையை மட்டுமே நம்பி கட்சி செயல்படுவது போலவும் பல முன்னுக்குபின்னான தவறான விளக்கங்களை அளித்துள்ளார்.

`

சமூகவலைத்தளத்தை மட்டுமே பிஜேபி தலைவர் அண்ணாமலை நம்பியிருப்பதாகவும் அதில் தன்னை புகழ்ந்தால் சந்தோசப்படுவது போலவும் பேசியிருப்பது மேலும் அதிர்ச்சியை உண்டுபண்ணியுள்ளது.

```
```

இதனிடையே நேற்று முதல்வர் முக.ஸ்டாலின் அவர்களை சந்தித்து அவரது கையால் பாண்டே விருது வாங்கிக்கொண்டார். அதன்பிறகு பிஜேபி குறித்தும் அதன் தலைவர் அண்ணாமலை குறித்தும் ரங்கராஜ் பாண்டே விமர்சனம் செய்து வீடியோ வெளியிட்டிருப்பதகுறிப்பிடத்தக்கது.

….உங்கள் பீமா