Thursday, May 2, 2024
Home > செய்திகள் > இந்தியாவில் தொடங்கப்பட்ட தாலிபான் கிளை..!? இஸ்லாமியர்களுக்கு தனிநாடு கோரிக்கை..!

இந்தியாவில் தொடங்கப்பட்ட தாலிபான் கிளை..!? இஸ்லாமியர்களுக்கு தனிநாடு கோரிக்கை..!

11-2-22/17.10pm

டெல்லி : இந்தியாவில் தெஹ்ரிக் இ தலிபான் எனும் பெயரில் ட்விட்டர் கணக்கு ஒன்று ஆரம்பிக்கப்பட்டு அனைத்து இஸ்லாமியர்களுக்கும் அழைப்பு விடப்பட்டிருப்பது பரபரப்பை கிளப்பியிருக்கிறது. மேலும் அந்த அமைப்பு ஹிஜாப் பிரச்சினைக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. விரைவில் எமிரேட்ஸ் ஆப் தெஹ்ரிக் இ தலிபான் இந்தியாவில் ஆரம்பிக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.

இதனிடையே பாகிஸ்தானில் இருந்து செயல்படும் செய்தி நிறுவனம் ஒன்று இந்தியா ஆப்கானில் இருக்கும் தீவிரவாதிகளுக்கு வங்கிகள் மூலம் பணப்பட்டுவாடா செய்வதாக செய்திகள் வெளியிட்டுள்ளது.

கராச்சியில் உள்ள சீனதூதரகம் மற்றும் பாகிஸ்தான் பங்குசந்தை கட்டிடம் ஆகிவற்றின் மீது நடந்த தாக்குதல்களில் இந்தியாவின் தொடர்பு இருப்பதாகவும் அடுக்கடுக்கான கட்டுக்கதைகளை அள்ளிவீசியிருக்கிறது.

`
https://twitter.com/miqazi/status/1314465948770934794?t=fE5sWD-03QhyXM-cTNtnJA&s=19

இந்நிலையில் பஞ்சாப்பில் செயல்பட்டு வரும் காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பு ஹிஜாப் பிரச்சினையில் இஸ்லாமிய மாணவிகளுக்கு ஆதரவு தெரிவித்ததுடன் இஸ்லாமியர்களுக்கு உருதுஸ்தான் எனும் தனி நாடு வேண்டுமென்று குரல்கொடுத்துள்ளது. இதுகுறித்து பேசிய SFJ தலைவர் குர்பத்வந்த் “இந்தியாவில் ஹிஜாப் அணிய தடை நீடிக்கிறது.அதை நீக்கவேண்டும். இந்த நிலைமை நீடித்தால் தொழுகை நடத்தவும் குரான் படிக்கவும் தடைவிதிக்கப்படும்.

மோடியின் இந்தியா இந்துநாடாக இருக்க விரும்புகிறது. ஹிஜாப் வாக்கெடுப்பை தொடங்குங்கள். இந்தியாவை உடைத்து இஸ்லாமியர்களுக்கென உருதுஸ்தான் என்ற நாட்டை உருவாக்குங்கள். அதற்கு தேவையான நிதியை நாங்கள் அளிப்போம்”என கூறியுள்ளார்.

```
```
https://twitter.com/Tehreek_e_TTI/status/1491481762333138953?t=9dtfMj_3JgSXFThvEpgkfw&s=19

இந்தியாவெங்கும் ஹிஜாப் பிரச்சினையை பூதாகாரமாக்கி மதக்கலவரத்தை உருவாக்கும் முயற்சியில் அந்நிய சக்திகள் ஈடுபட்டுக்கொண்டிருக்க திமுக காங்கிரஸ் போன்ற எதிர்க்கட்சிகள் அவற்றிற்கு தூபம் போட்டு நாட்டை பிளவுபடுத்த முயற்சிப்பதாக பிஜேபியினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

…..உங்கள் பீமா