Monday, May 19, 2025
Home > செய்திகள் > கிடப்பில் போடப்படும் நான்கு பெரிய நெடுஞ்சாலை திட்டங்கள்..! பொறுப்பேற்பது யார்..?

கிடப்பில் போடப்படும் நான்கு பெரிய நெடுஞ்சாலை திட்டங்கள்..! பொறுப்பேற்பது யார்..?

26-12-21/17.25pm

சென்னை : தமிழகத்தில் திட்ட நிலையில் இருக்கும் நான்கு பெரிய நெடுஞ்சாலை அமைக்கும் பணியை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் நிறுத்திவைக்கப்போவதாக செய்திகள் வெளிவருகின்றன.

தமிழக கேரள எல்லையிலிருந்து கன்னியாகுமரி வரையிலான நான்குவழிச்சாலைக்கான இரண்டு பெரிய திட்டங்களும் விக்கிரவாண்டி முதல் சோழபுரம் வரையிலான நான்கு வழிச்சாலை பணிகள் மற்றும் பொள்ளாச்சி கோவை இடையிலான நான்குவழிச்சாலை மற்றும் அதி முக்கியமாக கருதப்படும் ஸ்ரீபெரும்புதூர் வாலாஜாபாத் இடையிலான ஆறுவழிச்சாலை ஆகிய திட்டங்களை தேசிய நெடுஞ்சாலை துறை அமைச்சகம் நிறுத்திவைக்கப்பபோவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

கன்னியாகுமரியை பொறுத்தவரையில் அங்குள்ள ஒப்பந்தக்காரர்கள் தேவையான அளவில் மண் எடுக்கமுடியவில்லை என்றும் குவாரிகள் மற்றும் பாரேக்கள் மூடப்பட்டிருப்பதால் மாநில அரசின் ஒப்புதல் பெற முடியவில்லை என்றும் குறைகளை தெரிவித்து வருகின்றனர். ஸ்ரீபெரும்புதூர் சாலை பனியின் ஒப்பந்தக்காரர்களும் மண் மற்றும் தேவையான சாம்பல்கள் கிடைக்கவில்லை என கூறுகின்றனர்.

`

விக்கிரவாண்டி நெடுஞ்சாலை அமைக்க மாநில அரசு தேவையான நிலத்தை கொடுக்கவில்லை என்பதால் மீதமுள்ள பணிகளை நிறுத்திவைப்பதாக நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பொள்ளாச்சி கோவை நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி அமைக்க தற்போதைய அரசு இன்னும் நிலத்தை ஒதுக்கி கொடுக்கவில்லை என அதிகாரிகள் தரப்பில் சொல்லப்படுகிறது.

இந்த பிரச்சினைகளுக்கு தீர்வுகாண தலைமை செயலாளர் இறை அன்பு 25 மாவட்ட ஆட்சியாளர்களுடன் கடந்த மாதம் ஆலோசனை நடத்தியும் எந்த முடிவும் எட்டப்படவில்லை என தெரிகிறது. மேலும் கடந்த 16ம் தேதி அமைச்சர் எவ.வேலு NHAI உயரதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் காலம் கடந்த மாநில அரசு தரப்பில் சாலை பணியை மேற்கொள்ள இடமோ அல்லது மண் போன்ற மூலப்பொருட்களோ தங்கு தடையின்றி கிடைக்க மேல் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

```
```

தேசிய நெடுஞ்சாலைத்துறை மேற்சொன்ன நான்கு நெடுஞ்சாலை பணிகளையும் தற்போதைக்கு நிறுத்திவைத்துள்ளது. மேலும் இந்த திட்டம் கைவிடப்படுமா என்பது மாநில அரசின் கைகளில் இருப்பதாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.

…..உங்கள் பீமா