Sunday, April 28, 2024
Home > அரசியல் > நார்நாராய் கிழித்த பிஜேபி செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி..!

நார்நாராய் கிழித்த பிஜேபி செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி..!

8-11-21/ 5.43am

சென்னை: தமிழக பிஜேபி செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் காங்கிரஸ் தலைவர் ராகுலுக்கு அதிரடியான கேள்விகளை எழுப்பியுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் எந்த கூட்டத்தில் பேசினாலும் எந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசினாலும் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை வெளியிட்டு வருகிறார். இந்திய அரசு பிரதமர் மற்றும் குடியரசு தலைவருக்கு பாதுகாப்பது கருதி வாங்கிய விமானங்களை பிரதமர் மோடி தனது சொந்த பயன்பாட்டுக்கு வாங்கியதாக பொய்யான தகவல்களை வெளியிட்டிருந்தார்.

அந்த விமானங்கள் பிரதமருக்கு வாங்கியதே தவிர மோடிக்கு வாங்கப்பட்டதில்லை. மேலும் மோடி தனது பதவிக்காலம் முடிந்த பின்னர் அதை தனது வீட்டுக்கு கொண்டுபோக போவதில்லை. இந்த விஷயங்கள் தெரிந்திருந்தும் மக்களிடம் தவறான உள்நோக்கத்துடன் கூடிய தகவலை அளித்திருந்தார்.

`

இந்நிலையில் நேற்று நடந்த ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் பெண்களுக்கான இடஒதுக்கீடு அரசாணையை அளிப்பேன் என தவறான கருத்தை கூறியிருக்கிறார். இதுகுறித்து பிஜேபி செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“கே: “நீங்கள் பிரதமரானவுடன் வெளியிடும் முதல் அரசாணை என்னவாகவிருக்கும்?” ப: “பெண்களுக்கான இட ஒதுக்கீடு அரசாணையை அளிப்பேன்” :

```
```

17 ஆண்டு கால நாடாளுமன்ற உறுப்பினரும், தேசியக் கட்சியின் (?) தலைவருமான ஒருவர், அரசியலமைப்பு சாசன திருத்த மசோதா மூலம் அல்ல, அரசாணை மூலம் மகளிர் இடஒதுக்கீட்டைக் கொண்டு வருவேன் என்று கூறுவது அறியாமையா, ஆணவமா? இது முட்டாள்தனமா அல்லது மக்களை முட்டாள்கள் என நினைக்கும் மூர்கத்தனமா?” என விமர்சித்துள்ளார்.

தேர்தல் நெருங்க நெருங்க காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பொய்யான உள்நோக்கத்துடன் கூடிய தவறான தகவலை மக்களிடம் பரப்புவதாக பிஜேபியினர் விமர்சிக்கின்றனர்.

……உங்கள் பீமா