Friday, March 29, 2024
Home > அரசியல் > சிக்கிய பணம்..! கையும் களவுமாக பிடித்த பிஜேபியினர்..!

சிக்கிய பணம்..! கையும் களவுமாக பிடித்த பிஜேபியினர்..!

17-2-22/11.30am

சென்னை : தமிழகத்தில் நாளை மறுநாள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பிஜேபி உள்ளிட்ட கட்சிகள் பிரச்சாரத்தில் மும்முரமாக ஈடுபட்டுக்கொண்டிருக்க முக்கியமான திராவிட கட்சி ஒன்று வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதில் குறியாய் இருக்கிறது என எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்துவருகின்றன.

தாம்பரம் நங்கநல்லூர் உள்ளிட்ட சில இடங்களில் டோக்கன் சப்ளை செய்யப்படுவதாகவும் அந்த டோக்கன் மூலம் அரிசி பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப்பொருட்கள் இலவசமாக வழங்கப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது. அதே போல முதல்வர் அறிவித்திருந்த மகளிருக்கு மாதாமாதம் 1000 திட்டத்திற்கான விண்ணப்ப படிவம் என கூறிக்கொண்டு திமுக வேட்பாளர்கள் பலர் வாக்காளர்களின் ஆதார் எண், மொபைல் எண் உள்ளிட்ட சுயவிவரங்களை சேகரித்து வருவதாகவும் குற்றசாட்டு எழுந்துள்ளது.

`

இதனிடையே பிஜேபி தலைவர்களுள் ஒருவரான ஒரு வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் ” திமுக மட்டும் ஊழல்வாதிகள் அல்ல. மக்களையும் ஊழல்வாதிகளாக்க முயற்சிக்கிறது. விருகம்பாக்கம் 137ஆவது வார்டில் திமுக வேட்பாளர் ஒருவர் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ய முயற்சிக்கும்போது பிஜேபி தொண்டர்களால் சுற்றிவளைக்கப்பட்டு காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்” என குறிப்பிட்டுள்ளார்.

```
```

…..உங்கள் பீமா