Friday, March 29, 2024
Home > செய்திகள் > சென்னை கோயம்பேட்டில் உள்ள கிறித்தவ கல்லூரியில் பாலியல் அத்துமீறல்..!

சென்னை கோயம்பேட்டில் உள்ள கிறித்தவ கல்லூரியில் பாலியல் அத்துமீறல்..!

1-12-21/15-11-21

சென்னை : கோயம்பேடு பகுதியில் அமைந்துள்ள கிறித்தவ கல்லூரி ஒன்றில் பேராசிரியர் ஒருவர் மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக தெரிகிறது.

கோயம்பேடு பகுதியில் அமைந்துள்ளது தூய தாமஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி. இங்கு இருபாலின மாணவர்களும் பயின்று வருகின்றனர். இங்கு ஆங்கில துறை பேராசிரியராக இருப்பவர் தமிழ் செல்வன். இவர் கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்புவது பாலியல் சேட்டைகளில் ஈடுபடுவது என மாணவிகளை தொடர்ந்து துன்புறுத்தி வந்திருக்கிறார்.

`

சம்பவ நாளன்று ஒரு மாணவியிடம் தகாத முறையில் பேசியதாக தெரிகிறது. மேலும் அந்த மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. அதையடுத்து கல்லூரி நிர்வாகத்திடம் மாணவ மாணவியர்கள் புகார் அளித்துள்ளனர். அதை நிர்வாகம் கண்டு கொள்ளாமல் விட்டுவிட மாணவ மாணவியர் பெரும் போராட்டத்தில் ஈடுபட ஆரம்பித்தனர்.

```
```

இன்றும் மாணவர்கள் போராட்டம் தொடரவே கல்லூரி முதல்வர் காவல்துறையில் புகார் அளித்ததாக தெரிகிறது. அதையடுத்து ஆங்கில பேராசிரியர் தமிழ்ச்செல்வன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த செய்தியை வெளியிடும் எந்த நிறுவனமும் பெயரை குறிப்பிடவில்லை என்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. இந்துக்களின் பெயரில் உள்ள எந்த கல்வி நிறுவனமாக இருந்தாலும் பெயர் தவறாமல் குறிப்பிடப்படும் என்பது தமிழக ஊடகங்களின் தனிச்சிறப்பு.

….உங்கள் பீமா