Wednesday, May 20, 2026
Home > அரசியல் > சகலகலாவல்லவன்…! அண்ணாமலை சுட்ட தோசை..!

சகலகலாவல்லவன்…! அண்ணாமலை சுட்ட தோசை..!

11-2-22/10.35am

சென்னை : தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் தமிழகத்தில் பெட்ரோல் பாம், வேட்பாளர் மீது தாக்குதல் தேர்தல் அலுவலக தாக்குதல், வேட்பாளர் தற்கொலை, வேட்பாளர் மிரட்டப்படுத்தல், வேட்பாளர் கடத்தப்பட்டதாக புகார் என அரசியல் களம் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறது.

இதனிடையே தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை தமிழகத்தில் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார். தமிழகத்தின் முக்கியமான இடங்களுக்கு சென்று பிரச்சாரத்தை முடித்த அவர் நேற்று சென்னை பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். சென்னையில் 54,55 மற்றும் 57ஆவது வார்டுகளில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது வார்டு எண் 55 ல் பிரச்சாரத்தை மேற்கொண்டபோது அங்கிருந்த சாலையோர உணவக உரிமையாளர் ஒருவர் பிஜேபி தலைவர் அண்ணாமலையிடம் நீங்கள் தோசை சுட்டு காண்பித்தால் நான் உங்களுக்கு ஓட்டு போடுவேன் என கூற அண்ணாமலை உடனடியாக களத்தில் இறங்கினார். பின்னர் அங்கிருந்த கல்லில் முறுகலாக தோசை ஒன்றை சுட்டு காண்பித்தார்.

முன்னாள் காவல்துறை அதிகாரியும் வருங்கால முதல்வருமான அண்ணாமலை அவர்கள் செய்த இந்த செயல் அங்கிருந்த மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளதோடு மட்டுமல்லாமல் பிஜேபி தலைவர் அண்ணாமலையின் மாண்பை எடுத்துரைப்பதாக அமைந்துவிட்டதாக பிஜேபியினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

…..உங்கள் பீமா