Monday, May 6, 2024
Home > அரசியல் > தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை நடத்திய போட்டோசூட்..?? கொஞ்சம் இத பாரு கண்ணா..!

தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை நடத்திய போட்டோசூட்..?? கொஞ்சம் இத பாரு கண்ணா..!

10-11-21/ 12.15pm

கொளத்தூர் ; தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை அவர்கள் நேற்று மழையால் சேதப்பட்ட பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். மக்களுக்கு தேவையான நிவாரண பொருட்களை வழங்கினார்.

நேற்று அண்ணாமலை கொளத்தூர் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட போது மக்கள் அவரிடம் குறைகளை சொல்லி முறையிட்டனர். மேலும் அது முதல்வரின் தொகுதி என்பது கூடுதல் தகவல். கொளத்தூர் தொகுதியில் பிஜேபி தலைவர் அண்ணாமலை ஆய்வுமேற்கொண்டபோது நிருபரின் வேண்டுகோளுக்கிணங்க தனது அருகில் நின்றவர்களை தள்ளி நிற்க சொல்லிவிட்டு படகிலேயே அமர்ந்திருந்தார்.

நிருபர் ஒருவர் புகைப்படம் எடுத்துக் கொண்டார். இந்த நிகழ்வை அப்படியே வீடியோ பதிவு செய்த ஒருவர் இணையத்தில் உள்நோக்கத்தோடு பரவ விட்டார். அதையடுத்து பிஜேபி தலைவர் அண்ணாமலை நாடகமாடுகிறார் என திமுகவினர் மற்றும் கரூர் எம்பி ஜோதிமணி ஆகியோர் குரல் கொடுக்க தொடங்கினர்.

`

அதிலும் ஜோதிமணி அவர்கள் ” மக்கள் துயரப்படும்போது ஷூட்டிங் நடத்தி விளம்பரம் தேடுவது என்பது எந்த மாதிரியான மனா நிலை. அரசியல்வாதியாக வருந்துகிறேன்” என தனது கடந்த கால போராட்ட ஷூட்டிங் காலத்தை மறந்து பதிவிட்டுள்ளார்.

அண்ணாமலை அவர்கள் அந்த புகைப்படம் எடுக்கும் சில நிமிடங்களுக்கு முன் என்ன செய்தார் என்பதை வீடியோ வெளியிட்டவர் முழுமையாக சொல்ல மறந்துவிட்டார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

```
```

இந்த செய்தியை உடனடியாக தமிழ்நாடு முழுவதும் கொண்டு சேர்த்த ஊடகங்கள் திமுக தலைவர் மற்றும் முதல்வர் ஆய்வு மேற்கொள்ளாமல் ஆய்வு மேற்கொண்டதாய் போலியான புகைப்படத்தை பதிவிட்டது குறித்து எந்த செய்தியும் வெளியிடவில்லை என்பது சர்ச்சையை உண்டுபண்ணியுள்ளது.

…….உங்கள் பீமா