Saturday, July 27, 2024
Home > செய்திகள் > பாலத்துக்கடியில் கொண்டாடிய பனி மலர்..!

பாலத்துக்கடியில் கொண்டாடிய பனி மலர்..!

6-11-21/ 11.10am

திராவிட கொள்கையில் ஊறிப்போன தொலைக்காட்சி தொகுப்பாளர் பனிமலர் விநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள் சொன்னதற்காக உதயநிதி ஸ்டாலினையே கடிந்து கொண்டவர். பனிமலருக்கென தனி ரசிக பட்டாளமே உண்டு.

திராவிடத்தையும் பெரியார் கொள்கையையும் மூச்சாக இரு கண்ணாக கொண்டு வாழ்பவர் பனிமலர். பெரியாருக்கு எதிராகவோ இல்லை திராவிட கொள்கைக்கு எதிராகவோ யாரேனும் பேசினால் புயல் போல எழுபவர் என தன்னை விளம்பரப்படுத்திக் கொண்டவர் பனிமலர்.

அவரது ஆரம்ப காலகட்டங்களில் நடந்த பெரியார் கருத்தரங்கு ஒன்றில் ஈ.வே.ராமசாமி இப்போது உயிரோடு இருந்தால் கூட திருமணம் செய்து கொள்வேன் என பரபரப்பை கிளப்பி தன மீது மீடியா வெளிச்சம் படுமாறு பார்த்துக் கொண்டார். நேற்று முன்தினம் அவர் போட்ட ஒரு பதிவில் பூணூல் அணிந்த ஒருவர் இறைச்சிக்கடையில் நிற்பதுபோல ஒரு புகைபடத்தை வெளியிட்டு குறிப்பிட்ட சமூகத்தை இழிவுபடுத்தியிருந்தார்.

`

இதுகுறித்து பேசிய தங்க நகை உருக்குபவர்” பூணூல் ஒரு குறிப்பிட்ட சாதியை மட்டுமே சார்ந்தது கிடையாது. இந்துக்களில் சில பிரிவினர் தவறாமல் அணிவார்கள். அவர்கள் அணிந்திருக்கும் முறை மாறுபடலாம்.ஆனால் ஆனால் பூணூல் அனைவருக்கும் பொதுவானது.” என குறிப்பிட்டார்.

மேலும் பனிமலரின் பதிவுகளில் இந்துவிரோத கருத்துக்களையே காண முடிகிறது. 2ஜி ஊழலில் தவறான கருத்தை கூறியதற்க்காக வினோத் ராய் மன்னிப்பு கேட்டார் என பொய் செய்தியையும் வெளியிட்டுள்ளார். ஆனால் வினோத் ராய் மன்னிப்பு கேட்டது காங்கிரஸ் எம்பி ஒருவரை குறிப்பிட்டதற்கு என தெரிந்தும் உள்நோக்கத்தோடு இந்த பதிவை மக்கள் பார்வைக்கு வெளியிட்டிருக்கிறார் என அரசியல் கட்சியினர் விமர்சிக்கின்றனர்.

```
```
https://twitter.com/PanimalarPs/status/1453994869265874945?s=20

இந்நிலையில் பெரியார் கொள்கையை வலுவாக பிடித்திருப்பதாக கூறும் பனிமலர் இந்துக்களின் பண்டிகையை புது ஆடை அணிந்து பட்டாசு வெடித்து கொண்டாடினார். பெரியார்கொள்கையை பனிமலர் காற்றில் பறக்கவிட்டுவிட்டார் என பெரியாரிஸ்டுகளே புலம்பிவருகின்றனர்.

…..உங்கள் பீமா