Wednesday, May 15, 2024
Home > செய்திகள் > ISIS உடன் தொடர்பு..! சிக்கிய சட்டமன்ற உறுப்பினரின் பேத்தி..!

ISIS உடன் தொடர்பு..! சிக்கிய சட்டமன்ற உறுப்பினரின் பேத்தி..!

4-1-22/13.10pm

கர்நாடகா : காங்கிரஸ் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரின் பேத்திக்கு ISIS உடன் தொடர்பிருந்தது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

கர்நாடக மாநிலம் உல்லல் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் இடினியப்பா. இவரது மகள் மற்றும் மருமகன் வீட்டில் கடந்த ஜனவரியில் NIA சோதனை நடத்தியிருந்தது. அப்போது அவர்களது உறவினரான அம்மார் என்பவரை கைது செய்தது. மேலும் இடினியப்பாவின் மகனான பாஷாவிடமும் விசாரணை நடத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இடினியப்பாவின் பேத்தி வளைகுடா நாட்டில் படிக்கும்போது இஸ்லாத்தில் ஈடுபாடு ஏற்பட்டு கர்நாடகாவை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து மரியம் என்று பெயர்மாற்றிக்கொண்டிருக்கிறார். அதன்பிறகு 2016 ல் சிரியாவுக்கு தப்பிச்சென்றதாக கூறப்படுகிறது. அங்கிருந்து ISIS தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு ஏற்பட்டு பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது.

`

அதன்பின்னர் இந்தியாவிலிருந்து ISIS க்கு ஆள்சேர்ப்பு வேலையில் ஈடுபட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த மார்ச் மாதம் மரியம் மீது வழக்கு பதியப்பட்டு ஆதாரங்கள் கிடைத்த உடனே இன்று மங்களூரு அருகே உள்ள மாஸ்டிகட்டே பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து NIA வால் கைதுசெய்யப்பட்டுள்ளார். நேற்று சட்டீஸ்கர் காங்கிரஸ் அரசு சர்ச்சைக்குரிய வகையில் பாகிஸ்தானை சேர்ந்த இஸ்லாமிய அமைப்புக்கு 25 ஏக்கர் நிலம் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

```
```

காங்கிரசின் செயல்பாடுகள் தேசத்திற்கு எதிராகவே இருப்பதாகவும் காந்தி சொன்னது போல காங்கிரசை கலைக்க நேரம் வந்துவிட்டதாகவும் பிஜேபியினர் விமர்சித்து வருகின்றனர்.

…..உங்கள் பீமா