Monday, May 6, 2024
Home > செய்திகள் > கையெழுத்துப்போட்டால் திருமணமா என கேட்ட பிரபலம் கையெழுத்திட்டு திருமணம்..!

கையெழுத்துப்போட்டால் திருமணமா என கேட்ட பிரபலம் கையெழுத்திட்டு திருமணம்..!

10-11-21/1523pm

நோபல் பரிசு வென்றவரும் பெண்ணுரிமை பிரச்சாகருமான மலைலா யூசுப்சாய் இங்கிலாந்தில் உள்ள தனது வீட்டில் அஸர் மாலிக் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இதுகுறித்து தனது ட்விட்டரில் “இன்று எனது வாழ்வில் ஒரு விலைமதிப்பற்ற நாள். வாழ்க்கை துணையாக இருக்க அஸாரும் நானும் முடிச்சுப்போட்டுக்கொண்டோம்” என தெரிவித்துள்ளார். இந்த ட்வீட் 3லட்சம் பேரால் லைக் செய்யப்பட்டுள்ளது. மேலும் வாழ்த்துக்கள் உள்ளன.

மலாலாவை திருமணம் செய்த அசார் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் உயர்பதவியில் இருப்பதாக தெரிகிறது. மேலும் மலாலா தனது ட்விட்டரில் குடும்பங்களுடன் நிக்கா விழாவை சிறப்பாக பர்மிங்காமில் கொண்டாடினோம். உங்கள் வாழ்த்துக்களை பிரார்த்தனைகளை எங்களுக்கு அனுப்பவும்” என குறிப்பிட்டுள்ளார்.

`

இதே மலாலா 2021 ஜூலையில் VOGUE எனும் பத்திரிகைக்கு கொடுத்த பேட்டியில் ” எனக்கு ஒன்று இன்னும் விளங்கவில்லை. மக்கள் ஏன் திருமணம் செய்து கொள்கிறார்கள். உங்களுக்கு ஒரு துணை வேண்டுமெனில் எதற்கு திருமண சான்றிதழில் கையெழுத்திடவேண்டும். ஒரு பங்காளனாக ஏற்றுக் கொள்ளலாமே” என பேசியிருந்தார்.

```
```

ஆனால் தற்போது கையெழுத்திட்டே திருமணம் செய்திருக்கிறார். பல போராளிகளின் கருத்தும் செயலும் முன்னுக்குப்பின் முரணாகவே அமையும் என்பதற்கு மலாலா ஒரு எடுத்துக்காட்டு. அவரின் நோக்கம் சுயலாபமே என மீண்டும் நிரூபித்துவிட்டதாக விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

…..உங்கள் பீமா