Thursday, March 28, 2024
Home > செய்திகள் > இனி மதரஸாக்கள் இல்லை..!? எந்த மாநிலத்தில் தெரியுமா..?

இனி மதரஸாக்கள் இல்லை..!? எந்த மாநிலத்தில் தெரியுமா..?

அஸ்ஸாம் : மதரஸாக்களில் தேசியசிந்தனைகள் வளர்க்கப்படுவதில்லை எனவும் மதம் சார்ந்த கருத்துக்கள் மட்டுமே மாணவ மாணவியருக்கு போதிக்கப்பட்டு வருகிறது என்றும் தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில் மதரஸாக்கள் மீது நடவடிக்கை எடுக்கத்தொடங்கியள்ளது அஸ்ஸாம் மாநில அரசு.


பஞ்சசன்ய இதழின் 75ஆவது ஆண்டுவிழாவில் பேசிய அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா ” இந்தியா மாநிலங்கள் ஒன்று சேர்ந்த ஒன்றியம் என காங்கிரஸ் கூறிவருகிறது. அப்படியெனில் இந்திய தேசிய காங்கிரஸ் என ஏன் அழைத்துகொள்கிறார்கள். இந்தியாவின் 5000 வரலாறு பற்றி ராகுலுக்கு தெரியுமா.

`

ராகுல்காந்தி நாட்டில் பிரிவினையை விதைக்கிறார். அவர் மட்டுமல்ல நமது தேசத்தை ஒன்றியம் என கூறும் அனைவரும் பிரிவினைவாதிகள் என மக்கள் அறிவார்கள். காங்கிரசார் மக்களிடையே பிரிவினைவாத உணர்வுகளை ஊக்குவிக்க முயன்று வருகின்றனர். உல்பா அமைப்பு பேசுவதற்கும் இவர்கள் சொல்வதற்கும் மொழியில் மட்டுமே வித்தியாசம்

```
```

ராகுல் ஜெ.என்.யுவில் யாரிடமாவது பிரிவினைவாத எண்ணங்களை ட்யூசன் மூலம் கற்றுக்கொண்டிருப்பார் என தோணுகிறது. காந்தி குடும்பத்திற்கு எதிராக கருத்து கூறுவது தேசத்துரோகம். ஆனால் பிஜேபியில் முதலில் நாடு. அதன்பிறகே கட்சி. மதரஸாக்களை மூடுவது பற்றி என்னிடம் கேட்கிறீர்கள்.அரசு எடுக்கும் நடவடிக்கை மக்களின் நலனை சார்ந்தே இருக்கும்.


மதரஸாக்களை மூடுவதால் மட்டுமே இந்திய இஸ்லாமியர்கள் கல்வியில் மேம்பட முடியும். இஸ்லாமியர்கள் கல்வியில் முன்னேற மதரஸா என்ற வார்த்தையே ஒழியவேண்டும். நீங்கள் மதத்தை போற்ற விரும்பினால் அதை உங்கள் வீட்டிலேயே தொடருங்கள். பள்ளிகளில் மட்டுமே அறிவியல் மற்றும் கணிதம் கற்க முடியும்” என நேற்று நடந்த ஆர்கனைசர் மற்றும் பஞ்சஜன்யா பத்திரிக்கையின் 75 ஆவது ஆண்டுவிழாவில் அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஷ்வா சர்மா தெரிவித்தார்.