Friday, May 3, 2024
Home > செய்திகள் > மதுரையில் கொடூரம்..! லவ் ஜிஹாத்..? போதை ஊசி..!? மரணித்த சிறுமி..!

மதுரையில் கொடூரம்..! லவ் ஜிஹாத்..? போதை ஊசி..!? மரணித்த சிறுமி..!

6-3-22/15.18pm

மதுரை : மதுரை மாவட்டத்தில் சிறுமி ஒருவர் பாலியல் பலாத்காரத்திற்கு ஆட்படுத்தப்பட்டு பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அந்தபகுதியையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள தும்மம்பட்டியை சேர்ந்தவர் சாந்தி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) வயது 17. கடந்த பிப்ரவரி 14 அன்று தனது காதலன் நாகூர் கனிபா எனும் 29 வயது இளைஞருடன் வீட்டைவிட்டு ஓடியிருக்கிறார். மறுநாள் அவரது குடும்பத்தினர் காவல்நிலையம் சென்று புகாரளித்தும் பயனில்லாமல் போனதாக தெரிகிறது.

சாந்தியின் தாயார் மீண்டும் காவல்நிலையத்தை நாடியிருக்கிறார். அங்கு காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகாரளித்துள்ளார். இந்நிலையில் கடந்த மார்ச் 3 அன்று சாந்தியை ஆட்டோவில் அழைத்துவந்த நாகூர் மற்றும் அவரது தாயார் வீட்டருகே இறக்கிவிட்டு சென்றதாக சொல்லப்படுகிறது. மேலும் அந்த சிறுமி உணர்வற்ற நிலையில் ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உயிருக்கு போராடிய நிலையில் தற்போது அவர் மரணமடைந்துள்ளார்.

`

இதுதொடர்பாக நாகூர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்து அமைப்பினர் கூறுகையில் கூட்டுப்பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டு சிறுமிக்கு போதை ஊசிகளை போட்டதாக குற்றம்சாட்டுகின்றனர்.

```
```

தகவல்கள் முன்னுக்குப்பின் முரணாக உலவிவரும் வேளையில் காவல்துறை இதுகுறித்த உண்மைநிலவரத்தை வெளியிடவேண்டும் என மேலூர் பகுதிமக்கள் கோரிக்கையெழுப்புகின்றனர்.

….உங்கள் பீமா