Monday, February 10, 2025
Home > அரசியல் > பாண்டேவின் சாணக்யத்தனம்..! சிக்கிய அமெரிக்கை நாராயணன்..!

பாண்டேவின் சாணக்யத்தனம்..! சிக்கிய அமெரிக்கை நாராயணன்..!

சென்னை : நடந்துமுடிந்த ஐந்துமாநில தேர்தல்களில் காங்கிரஸ் படுதோல்வியடைந்தது. இதற்க்கு காரணமாக உட்கட்சிப்பூசல் எனும் காரணி மூலமாக இருந்தாலும் மூத்த நிர்வாகிகள் சிலர் காங்கிரசை கட்டுப்படுத்துவதாக கூறப்படுகிறது. மேலும் வேட்பாளர்கள் தேர்தல் பொறுப்பாளர்கள் தேர்வில் காங்கிரஸ் கோட்டைவிட்டதாக காங்கிரஸ் அபிமானிகள் முணுமுணுக்கின்றனர்.

இதனிடையே ரங்கராஜபாண்டேவுடன் நடந்த நேர்காணலில் அமெரிக்கை நாராயணன் ராகுல் மற்றும் ப்ரியங்கா காந்தியை வெளுத்து வாங்கிவிட்டார். இருவருக்கும் தலைமையேற்க தகுதியில்லை என உண்மையை உடைத்துபேசிவிட்டார். இதனால் வெகுண்டெழுந்த தமிழக காங்கிரஸ் காங்கிரஸ் கட்சியில் இருந்து அவரை நீக்கும் என எதிர்பார்த்த தருணத்தில் அவரை தொலைக்காட்சிகளில் விவாதத்தில் பங்கேற்க கூடாது எனும் கடுமையான நடவடிக்கையை எடுத்துள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில் “காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளுக்கும் தலைமைக்கும் விரோதமாக பொதுவெளியில் ஊடகங்கள் வாயிலாக கருத்துக்களை வெளியிட்டுவருவதால் அம்ரிக்கை நாராயணன் காங்கிரஸ் கட்சி தொடர்பாக தொலைக்காட்சி விவாதங்களில்பங்கேற்கும் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் ” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

`

இதற்க்கு இரு தினங்களுக்கு முன்னர் சவுக்கு சங்கர் என்பவருடன் அமெரிக்கை செல்பி எடுத்தது குறிப்பிடத்தக்கது.

```
```

காங்கிரசின் நடவடிக்கைக்கு அமெரிக்கை ” விளக்கம் கேட்காமல் 30வருடமாக கட்சிக்கு சொந்தப்பணத்தில் உழைப்பில் புகழ் சேர்த்த நான் காங்கிரசுக்கு எதிராக பேசியது என்ன என்பதை அழகிரி விளக்க வேண்டும்” என கூறியுள்ளார். மேலும் சோனியா ராகுல் மற்றும் ராகுல் ஆகியோர் இன்று தங்களது ராஜினாமா கடிதத்தை இன்று நடக்கும் மூத்த நிர்வாகிகள் கூட்டத்தில் வழங்க இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கிறது.

…..உங்கள் பீமா