Friday, March 29, 2024
Home > செய்திகள் > மூடிட்டு போவியா..? குஷ்பூ சுந்தர் ஆவேசம்..!

மூடிட்டு போவியா..? குஷ்பூ சுந்தர் ஆவேசம்..!

23-1-22/16.41pm

சென்னை : அரியலூரில் கட்டாயமாதமாற்றத்தை எதிர்த்து உயிர்துறந்த மாணவி விவகாரத்தில் அரசியல் கட்சித்தலைவர்கள் யாரும் கருத்து தெரிவிக்காத நிலையில் பிஜேபியினர் மட்டும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நீதி வழங்க வேண்டி குரல் கொடுத்தும் தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டம் நடத்தியும் வருகின்றனர்.

இதனிடையே தமிழக பிஜேபி தலைவர்களில் ஒருவரான குஷ்பூசுந்தர் செய்தியாளர்கள் சந்திப்பில் “ஒவ்வொரு விஷயத்தையும் பேசும் முதல்வர் ஏன் இந்த சிறுமியின் விஷயத்தை பேச மறுப்பது ஏன். ஏன் பயப்படுகிறார். எது அவரை தடுக்கிறது. நாங்கள் சிபிஐ விசாரணை கேட்கிறோம். அதை செய்ய மறுப்பது ஏன். நாங்கள் ஒரு குழந்தையை பறிகொடுத்திருக்கிறோம். உறுதியாக சிபிஐ விசாரணை வேண்டும்.

ஒரு எஸ்பி அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என கூறுகிறார். தெளிவான வீடியோ ஆதாரம் இருந்தும் நடவடிக்கை எடுக்க மறுக்கிறார். அவரை டிஸ்மிஸ் செய்யவேண்டும். ஒவ்வொரு விஷயத்திற்கும் கடிதம் எழுதுகிறார். ஆனால் லாவண்யா விஷயத்தில் வாய்திறக்க மறுக்கிறார். திமுக கூட்டணி கட்சி தலைவர்களும் இந்த சிறுமி விஷயத்தில் வாய்திறக்க மறுக்கிறார்கள்.

`

யார் கொட்டாவி விட்டாலும் சரி யார் தூங்கினாலும் பேசுகிற நீங்கள் இந்த விஷயத்தை பேசாமல் இருப்பது ஏன். எதற்க்காக பயப்படுகிறீர்கள். சிறுபான்மையினர் வாக்குவங்கி பாதிக்கப்படும் என பயப்படுகிறீர்களா” என தெரிவித்துள்ளார்.

```
```

இந்த பதிவில் முஸ்லிமாக பிறந்து, இந்துவாக மாறி வாழ்ந்து கொண்டிருக்கும் நீதான் சொல்லனும் என ஒருவர் பதிவிட்டுள்ளார். இதற்க்கு பதிலளித்த குஷ்பூ ” டேய் லூசு எவண்டா மதம் மாறுனா மேரேஜ் ஸ்பெஷல் ஆக்ட் கேள்விப்படிருக்கியா. மூடிட்டு போவியா. வந்துட்டாங்க பொ(று)க்கிங்க என பதிலடி கொடுத்துள்ளார்.

….உங்கள் பீமா