28-3-22/10.52AM
கோவா : பிஜேபி தலைவரான பிரமோத் சாவந்த் இன்று இரண்டாவது முறையாக முதலமைச்சராக பதவியேற்கிறார். பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.
பதவிப்பிரமாணம் இன்று காலை 11 மணியளவில் பனாஜியில் உள்ள டாக்டர்.ஷ்யாம பிரகாஷ் முகெர்ஜி ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. கவர்னர் பி.எஸ்.ஸ்ரீதரன் பிள்ளை பதவிப்பிரமாணம் செய்துவைக்கிறார். 11 அமைச்சர்களும் இன்று பதவியேற்க உள்ளனர்.
இந்த விழாவில் நிதின்கட்கரி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஜேபி.நட்டா ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
மேலும் பிஜேபி ஆளும் மாநிலங்களில் 15 அமைச்சர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
கடந்த சட்டமன்ற தேர்தலில் 20 சீட்டுகளை வென்ற பிஜேபி மூன்று சுயேச்சைகளின் ஆதரவையும் பெற்றிருந்தது. மஹாராஷ்டிரவாடி கொமாண்டக் பார்ட்டியை சேர்ந்த இரு சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஒரு சுயேச்சை வேட்பாளரின் ஆதரவை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த விழாவில் 10000திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொள்கின்றனர்.
மேலும் பதவியேற்கும் அமைச்சர்கள் பட்டியலை தற்போது வரை பிஜேபி ரகசியமாக வைத்துள்ளார். இதுகுறித்து கட்சி தலைமை தொடர்ந்து மௌனம் காத்தியது குறிப்பிடத்தக்கது.
அதேபோல விழாவிற்க்கு கருப்புத்துணி மற்றும் கருப்புநிற மாஸ்க் அணிந்து வருபவர்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது என மாநில பிஜேபி தலைவர் சதானந்த் செட் தனவாடே தெரிவித்துள்ளார்.
….உங்கள் பீமா
#goa #oath #ceremony2022 #pramodsawant #bjp