Friday, March 29, 2024
Home > செய்திகள் > ஓசி சோறு..! ரங்கராஜ் பாண்டே கொடுத்த ஷாக்..!

ஓசி சோறு..! ரங்கராஜ் பாண்டே கொடுத்த ஷாக்..!

18-11-21/10.45am

சென்னை : நேற்று முன்தினம் ரங்கராஜ் பாண்டேயின் சாணக்யா சேனல் முடக்கப்பட்டதை தொடர்ந்து நேற்று மீட்கப்பட்டது. மீண்டும் இன்று சாணக்யா சேனல் முடக்கப்பட்டதாக ரங்கராஜ் பாண்டே அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

ரங்கராஜ் பாண்டே ஒரு நடுநிலையான பத்திரிக்கையாளர் மட்டுமல்ல நேர்மையான மனிதரும் கூட. இவருக்கு அரசியல் நண்பர்கள் ஊடக நண்பர்கள் என நட்பு வட்டாரமும் அவரது நேர்மையான கருத்துக்கென தனி ரசிக பட்டாளமும் உண்டு. சமீபத்தில் சாணக்யா சார்பில் நடத்தப்பட்ட கூட்டம் ஒன்றில் மத்திய அமைச்சர் முருகன் மற்றும் தமிழக்பிஜேபி தலைவர் அண்ணாமலை ஆகியோர் பங்குபெற்றனர். அதற்கு அடுத்த நாளில் அவரது சாணக்யா சேனல் மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டது.

அதை தொடர்ந்து நேற்று வீடியோ வெளியிட்ட அவர், ” என் மீது அன்பு கொண்டிருக்கும் அனைத்து மக்களுக்கும் நன்றி. அரசியல் நண்பர்கள் சூற்று வட்டார நண்பர்கள் ஊழியர்கள் சினிமாத்துறை நண்பர்கள் பொது மக்கள் என ஆயிரக்கணக்கான தொலைபேசி அழைப்புகள். இந்த ஊக்கமும் அன்பும் இன்னும் என்னை வலுவாக எழச்செய்யும்.

`

சில நண்பர்கள் எனது சேனல் முடக்கப்பட்டதால் சாப்பாட்டுக்கு என செய்வேன் என விசாரித்திருக்கிறார்கள். நான் பல நிறுவனங்களில் பணிபுரிந்திருக்கிறேன். அதனால் மீண்டும் பணியில் சேர எனக்கு எந்த தயக்கமும் இல்லை. நான் சொந்த தொழில் நடத்தி வருகிறேன். யாரிடமும் ஓசி சோறு வாங்கி உண்ணும் அளவுக்கு கடவுள் என்னை வைக்கவில்லை.” என கூறினார்.

மேலும் நேற்று சேனல் மீட்கப்பட்ட நிலையில் இன்று மீண்டும் ஹேக் செய்திருக்கிறார்கள். இது அரசியல் ரீதியான பழிவாங்கல் என பாண்டே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

```
```

….உங்கள் பீமா