Saturday, July 27, 2024
Home > செய்திகள் > சுந்தர் பிச்சை மீது வழக்கு..! ஏமாற்றி பல லட்சங்கள் சம்பாதித்து விட்டதாக புகார்..!

சுந்தர் பிச்சை மீது வழக்கு..! ஏமாற்றி பல லட்சங்கள் சம்பாதித்து விட்டதாக புகார்..!

27-1-22/10.00AM

டெல்லி : கூகுள் நிறுவனத்தின் CEOவான சுந்தர் பிச்சை மீது இந்திய திரைப்பட இயக்குனர் ஒருவர் புகார் கொடுத்துள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது.

சுந்தர் பிச்சைக்கு மத்திய அரசு நாட்டின் உயரிய விருதான பத்மவிபூஷண் விருதை வழங்கி கௌரவித்துள்ளது. இந்நிலையில் பாலிவுட்டை சேர்ந்த டைரக்டர் சுனில் தர்சன் என்பவர் சுந்தர் மீது காவல்துறையில் புகார் அளித்துள்ளார். அதில் ” 2017 ல் எனது இயக்கத்தில் வெளிவந்த ஏக் கஸீனா தி ஏக் தீவானா தா எனும் திரைப்படத்தை எங்களிடம் எந்த அனுமதியும் வாங்காமல் யூ ட்யூப் சேனலில் பதிவேற்றம் செய்து பலமில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.

`

அதன்மூலம் பணம் சம்பாதித்த சுந்தர் பிச்சை அதற்கான பதிவேற்ற உரிமையை எங்களிடம் கோரவில்லை. இது முழுவதும் திட்டமிட்டு எங்களை ஏமாற்றிய செயல் ஆகும். மேலும் எங்கள் அனுமதி கோராமல் படத்தை பதிவேற்றம் செய்தது சட்டத்திற்கு புறம்பான செயல் ஆகும்” என குறிப்பிட்டுள்ளார். மேலும் யூ ட்யூப் தலைமை அதிகாரி கெளதம் ஆனந்த் மற்றும் க்ரீவன்ஸ் அதிகாரி ஜோ க்ரியர் உட்பட ஐந்து பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

```
```

ஏக் கஸீனா தி ஏக் தீவானா தா எனும் திரைப்படத்தை எழுதி இயக்கி தயாரித்தவர் சுனில் தர்ஷன். இந்த திரைப்படத்தில் நடாஷா பெர்னாண்டஸ் சிவ தர்ஷன் உபேன் படேல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களாக நடித்திருக்கின்றனர். சுந்தர் பிச்சை தரப்பிலிருந்து இதுவரை மறுப்பு அறிக்கையோ அல்லது விளக்க அறிக்கையோ வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

…..உங்கள் பீமா