31-1-22/11.00am
மணிப்பூர் : மணிப்பூர் மாநில சட்டமன்ற தேர்தல் வருகிற பிப்ரவரி 10 ம் தேதி தொடங்க உள்ளது. இந்த தேர்தலில் மொத்தமுள்ள 60 சட்டமன்ற தொகுதிகளில் பிஜேபி தனித்து போட்டியிடுகிறது. 60 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலையும் நேற்று அறிவித்துள்ளது.

இஸ்லாமிய வேட்பாளர் ஒருவரும் மூன்று பெண் வேட்பாளர்களும் இந்த தேர்தலில் பிஜேபி சார்பில் களமிறங்குகின்றனர்.இந்நிலையில் அறுபது தொகுதிகளில் 16 தொகுதிகளில் புது வேட்பாளர்களை களம் இறக்குகிறது பிஜேபி. ஏற்கனவே தொகுதியில் வென்ற வேட்பாளர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.

காங்கிரசிலிருந்து விலகி சமீபத்தில் பிஜேபியில் இணைந்த அனைவருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறி மணிப்பூரில் ஆங்காங்கே போராட்டம் வெடித்திருக்கிறது. மாநில பிஜேபி தலைவர் அதிகாரிமய்யும் சாரதா தேவி மற்றும் முதல்வர் பிரென் சிங் கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக உள்ளாட்சி தேர்தலுக்கு அதிமுக கடலூர் விழுப்புரம் தருமபுரி ஆகிய பகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளது. அதில் பிஜேபி க்கு எந்த உள்ளாட்சி என குறிப்பிடவில்லை.

மேலும் தமிழகத்தில் எதிர்க்கட்சியாக பிஜேபி செயல்பட்டு வரும்நிலையில் பிஜேபிக்கான முக்கியத்துவத்தை அதிமுக கொடுக்க மறுக்கிறது என குற்றசாட்டு எழுந்துள்ளது.


வேட்பாளர் அறிவிப்பு வரவிருந்த நிலையில் பிஜேபி தலைவர் நயினார் நாகேந்திரன் திமுகவை சீண்டாமல் அதிமுகவை சீண்டியது ஏதேனும் உள்நோக்கமாயிருக்கலாம் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

அதே நேரத்தில் தமிழகத்தில் திமுகவுக்கு நேரடி எதிர்க்கட்சியாக பிஜேபி வளர்ந்துவிட்ட நிலையில் இந்த உள்ளாட்சி தேர்தலில் மணிப்பூர் மாநில பிஜேபியை போல தனித்து நிற்கலாம் என பிஜேபி அடிமட்ட தொண்டர்கள் கருத்து கூறிவருகின்றனர்.
……..உங்கள் பீமா