3-12-21/6.18am
கோயம்புத்தூர் : விவசாய நிலங்களை கையகப்படுத்துவதை தமிழக அரசு உடனடியாக கைவிடவேண்டும். ஒரு செங்கல்லை கூட இங்கிருந்து எடுக்க தமிழக பிஜேபி அனுமதிக்காது என தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
இதுகுறித்து அண்ணாமலை அவர்கள் வெளியிட்டுள்ள செய்தியில் “விவசாய நிலங்களில் அமையவுள்ள TIDCO தொழிற்பேட்டையை எதிர்த்துப் போராடி வரும் அன்னூர் பகுதி குன்னிபாளையம், அக்கரை செங்கபள்ளி, வாக்கானாம் கொம்பு, ஆத்திகுட்டை, குழியூர் விவசாயிகளை அவர்களின் இல்லம் தேடிச் சென்று இன்று சந்தித்தேன். பல ஏக்கர் விவசாய நிலங்களுடன் குடி இருக்கும் வீட்டையும் இழக்கும் சூழ்நிலைக்குத் தள்ளப்படுவோமோ என்ற அச்சத்தில் தவித்து வரும் விவசாயிகள் நடத்திவரும் இந்த அறப்போராட்டத்திற்குத்
தமிழக பிஜேபியின் ஆதரவைத் தெரிவித்தோம்.
அவினாசி அத்திக்கடவு திட்டம் மூலமாக மேலும் பயனடையவுள்ள இந்த பகுதியில் நிலத்தைக் கையகப்படுத்தி தொழிற்பேட்டை அமைக்கவிருக்கும் தமிழக அரசின் இந்த முயற்சியைத் தடுக்க அனைத்து போராட்டங்களையும் பாரதிய ஜனதா கட்சி முன்னெடுத்துச் செல்லும் என உறுதி அளித்துள்ளோம்.
விவசாயிகளை வஞ்சிக்கும் இந்த திட்டத்தை திமுக அறிவாலய அரசு உடனடியாக கைவிடவேண்டும். விவசாயிகளை விவசாயம் செய்யவிடுங்கள். ஆட்சிக்கு வந்தது முதல் எந்தவொரு மக்கள் நலத் திட்டத்தையும் செயல்படுத்தாத அறிவாலய அரசு, விவசாய பூமியான அன்னூர் பகுதியைக் கந்தக பூமியாக மாற்றவே TIDCO தொழிற்பேட்டையைக் கொண்டு வருகிறது.

ஒரு கார்ப்பரேட் நிறுவனம் சிறு சிறு துண்டுகளாக வாங்கி வைத்திருக்கும் பூமியைச் சுற்றி இருக்கும் 3832 ஏக்கர் விவசாய நிலத்தைக் கையகப்படுத்தும் முயற்சி அங்கு வாழும் 10,000 மக்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்க நில புரோக்கார்களும், ஒரு சில கார்ப்பரேட் நிறுவனங்களும் முயன்று வருகிறதுஇந்த முயற்சியின் பின்னால் இருப்பது எந்த குடும்பமாக இருந்தாலும் அதனுடைய உறுப்பினர்களாக இருந்தாலும் விவசாயத்தை அழித்து அந்த இடத்தில் ஒரு செங்கல்லைக் கூட நட தமிழ்நாடு பிஜேபி விடாது” என தெரிவித்துள்ளார்.
…..உங்கள் பீமா