Friday, April 19, 2024
Home > அரசியல் > திருவண்ணாமலையில் பரபரப்பு..! நிறைமாத கர்ப்பிணி மீது தாக்குதல்..! பார்முக்கு திரும்பிய திமுகவினர்..!

திருவண்ணாமலையில் பரபரப்பு..! நிறைமாத கர்ப்பிணி மீது தாக்குதல்..! பார்முக்கு திரும்பிய திமுகவினர்..!

20-2-22/11.50am

திருவண்ணாமலை : நேற்று திருவண்ணாமலை நகராட்சி வார்டில் புகுந்த திமுகவினர் அதிமுக மற்றும் பிஜேபி பெண்வேட்பாளர்களை ஆபாசமாக பேசி தாக்கியதாக குற்றசாட்டு எழுந்துள்ளது. மேலும் நிறைமாத கர்ப்பிணி ஒருவரை தாக்கி கீழே தள்ளியதாக கூறப்படுகிறது.

திருவண்ணாமலை நகராட்சி வார்டு 13ல் புகுந்த திமுக முன்னாள் நகர்மன்ற தலைவர் ஸ்ரீதர் தலைமையிலான திமுகவினர் அராஜகத்தில் ஈடுபட்டனர். அதிமுக வேட்பாளர் சஹானா மற்றும் பிஜேபி வேட்பாளர் செண்பகவல்லி ஆகியோரை படுஆபாசமாக திட்டிய ஸ்ரீதர் அவரது ஆதரவாளர்ளுடன் சேர்ந்து செண்பகவல்லி சஹானா மற்றும் பிஜேபி மகளிர் அணியை சேர்ந்த ஷோபனா ஆகியோரை தாக்கி கீழே தள்ளியதாக சொல்லப்படுகிறது. மேலும் ஷோபனா நிறைமாத கர்ப்பிணி என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஸ்ரீதர் ஒருமையில் திட்டியதாக தெரிகிறது. பூத்தை கைப்பற்ற முயன்ற திமுகவினரை தட்டிக்கேட்ட பிஜேபி மாவட்ட செயலாளர் சதீஷ் நகர பொதுச்செயலாளர் செந்தில் ஆகியோரையும் திமுகவினர் தாக்கியுள்ளனர். திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிராக நடைபெற்றுவரும் அநீதிக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என திருவண்ணாமலை பிஜேபியினர் விமர்சித்து வருகின்றனர்.

`

இதனிடையே பிஜேபியினரை தாக்கிய குண்டர்களை கைது செய்ய கோரியும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் மறுதேர்தல் நடத்த கோரியும் திருவண்ணாமலை பிஜேபி சார்பில் இன்று கண்டன போராட்டம் திருவண்ணாமலை பேருந்து நிலையம் அறிவொளி பூங்கா அருகே நடைபெற்று வருகிறது. இந்த கண்டன கூட்டத்தில் மாநில துணை தலைவர் கே.எஸ்.நரேந்திரன், கார்த்தியாயினி ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றுகின்றனர்.

```
```

…..உங்கள் பீமா

கூகுள் நியூசில் பின்தொடரhttps://news.google.com/publications/CAAqBwgKMP78qAsw8IfBAw?hl=en-IN&gl=IN&ceid=IN%3Aen