Thursday, March 28, 2024
Home > செய்திகள் > அண்ணா மீது சத்தியமாக…! கலைஞர் மீது சத்தியமாக….!முதல்வருக்கே குடைச்சலை கொடுத்த திமுகவினர்..!

அண்ணா மீது சத்தியமாக…! கலைஞர் மீது சத்தியமாக….!முதல்வருக்கே குடைச்சலை கொடுத்த திமுகவினர்..!

13-1-22/15.26pm

தென்காசி : திமுக நிர்வாகிகள் யாரேனும் தவறிழைத்தால் அண்ணா மீது ஆணையாக கலைஞர் மீது ஆணையாக இந்த ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பான் என கூறிய 24 மணிநேரத்தில் திமுகவினர் செய்த காரியம் முதல்வரின் வாக்குறுதியில் தீவைத்தது போலாகிவிட்டதாக திமுகவினரே புலம்பி வருகின்றனர்.

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் ஒன்றியம் இரட்டைக்குளம் தொடக்கவேளாண்மை கூட்டுறவு சங்க தலைவராக இருப்பவர் திமுகவை சேர்ந்த காசி. இன்னொரு திமுக பிரமுகர் சுடலை. இவர்களை நேற்று பொதுமக்கள் சிறைப்பிடித்த சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது. இரட்டைக்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் விவசாயிகளுக்கு இரண்டு மூட்டை உரம் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது.

`

இதனிடையே திமுகவை சேர்ந்த காசி மற்றும் சுடலை இருவரும் இரட்டைக்குளம் தொடக்க வேளாண்மை அலுவலக குடோனிலிருந்து 40 உரமூட்டைகளை ஒரு வாகனத்தில் கடத்தி செல்ல முயன்றனர். இதையறிந்த ஊர்மக்கள் ஒன்று கூடி இருவரையும் சிறைப்பிடித்தனர். அதையடுத்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

```
```

அதன்பின்னர் கடத்தலுக்கு பயன்பட்ட வாகனம் காவல்நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. காசி மற்றும் சுடலை மீது வழக்கு பதியப்பட்டதா என்ற கேள்விக்கு காவல்துறை வட்டாரத்தில் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை என அதிமுகவினர் விமர்சித்து வருகின்றனர்.

….உங்கள் பீமா