Friday, March 29, 2024
Home > செய்திகள் > அடுத்த கொலை…! அடுத்த வீடியோ..!கைகட்டி நிற்கும் காங்கிரஸ்..!?

அடுத்த கொலை…! அடுத்த வீடியோ..!கைகட்டி நிற்கும் காங்கிரஸ்..!?

20-12-21/10.22am

பஞ்சாப் : பொற்கோவில் ஊழியர்களால் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டதாக கூறப்படும் வேளையில் மீண்டும் ஒரு இளைஞனை அடித்து அதை வீடியோவாக வெளியிட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை உண்டுபண்ணியுள்ளது. இந்த சம்பவம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

சீக்கியர்களின் புனிதஸ்தலமான பொற்கோவிலின் கருவறைக்குள் அத்துமீறி நுழைந்த மர்ம நபர் ஒருவரை சீக்கியர்கள் அடித்து காவலாளிகளிடம் ஒப்படைத்தனர். சிறிது நேரத்தில் அந்த நபர் சடலமாக மீட்டெடுக்கப்பட்டார். கருவறைக்குள் அத்துமீறி நுழைந்ததாகவும் கிர்பனை கொண்டு புனித கிரந்த நூலை எடுத்ததாகவும் அதனால் தாக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

இந்த சம்பவம் நடந்த 24 மணிநேரத்திற்குள் கபூர்தலா பகுதியில் உள்ள சீக்கியர்களின் புனிதஸ்தலத்தில் அத்துமீறி நுழைய முயன்ற ஒரு இளைஞனை கட்டிப்போட்டு பிரம்பால் தாக்கி கொன்றுள்ளனர் சீக்கியர்கள். மேலும் அந்த இளைஞன் கதறுவதை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். காவல்துறை இதில் தலையிடக்கூடாது என மிரட்டியிருக்கின்றனர்.

`

அதனால் பஞ்சாப் காவல்துறை கைகட்டி வேடிக்கை பார்த்துக்கொண்டு நிற்பதாக சொல்லப்படுகிறது. மாநில அரசோ மத்திய அரசோ இந்த விவகாரங்களில் தலையிடாமல் கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றால் இதே சம்பவம் நாடு முழுவதும் தொடர வாய்ப்பிருப்பதாக நடுநிலையாளர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

மேலும் கூட்டமாக சேர்ந்து இது போன்ற சமூக குற்றங்களை நிகழ்த்தினால் அரசுகள் கண்டும் காணாதது போல சென்றுவிடும் என்ற மனோபாவத்தை இந்த சம்பவங்கள் உணர்த்துவதாக மேலும் தெரிவிக்கின்றனர். இந்த போக்கு சமூகத்தில் நிலவும் நல்லிணக்கத்தை குலைக்கும் வகையில் இருப்பதாக பலர் தங்கள் கருத்துக்களை கூறிவருகின்றனர்.

```
```

…..உங்கள் பீமா