6-3-22/11.19am
கேரளா : சிபிஎம் குண்டர்களால் தாக்கப்பட்ட ஒருவர் படுகாயமடைந்த நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மூன்று நாள் போராட்டத்திற்கு பிறகு வழக்கு பதியப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.
இடுக்கி மாவட்டம் காரியமண்ணூர் பகுதியை சேர்ந்தவர் ஜோசப் விச்சூர். இவரது மகன் ஜோஜோ. இவர் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் கம்யூனிஸ்டின் ஒரு பிரிவான DYFIஇல் உறுப்பினராக இருந்தார். அதன்பிறகு விலகி இளைஞர் காங்கிரசில் இணைந்தார். அதுமுதற்கொண்டே உள்ளூர் காங்கிரஸ் சிபிஎம் பிரமுகர்களுக்கிடையே விரோதம் இருந்துவந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சிபிஎம் மாவட்ட நிர்வாகிகள் தேர்வு பற்றி தனது முகநூலில் ஜோசப் பதிவிட்டதாக தெரிகிறது அதையடுத்து கரியமன்னுர் பகுதி சிபிஎம் செயலாளர் சுமேஷ் தலைமையிலான 20 பேர் கொண்ட குழு ஜோசப்பை தேடியது. தொலைபேசியில் அவரை அழைத்து காங்கிரசில் இருந்து பேசுவதாக கூறி அவர் இருக்கும் இடத்தை அறிந்து கொண்ட அந்த குண்டர்கள் குழு அங்கு விரைந்தது.
பணியை முடித்துவிட்டு தனது மகனுக்காக உடும்பனூர் பகுதியில் இரவு 10 மணிக்கு காத்திருந்த அவரை சூழ்ந்த சிபிஎம் குண்டர்கள் இரும்பு கம்பியால் பலமாக தாக்கினர். அவரது கைகால்களை உடைத்து ரோட்டோரம் வீசி சென்ற அந்த கும்பல் தப்பியோடியது. அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர் தொடுபுழா பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மூன்று நாட்களாக வழக்கை எடுக்க காவல்துறை மறுத்ததாக கூறப்படுகிறது. சாட்சிகள் வலுவாக இருக்கவே நேற்று வழக்கு பதிந்த காவல்துறை குற்றம் சாட்டப்பட்டவர்களை விரைவில் கைது செய்வதாக வாக்குறுதி அளித்துள்ளது. சிபிஎம்மின் இந்தவகையான தோழமை சுட்டுதலை காங்கிரசார் எதிர்பார்க்கவில்லை என கூறப்படுகிறது.
…..உங்கள் பீமா