Friday, March 29, 2024
Home > செய்திகள் > திமுக அமைச்சர் செந்தில் பாலாஜியை வரவேற்க பொள்ளாச்சி அதிகாரிகள் புது ரூட்..!

திமுக அமைச்சர் செந்தில் பாலாஜியை வரவேற்க பொள்ளாச்சி அதிகாரிகள் புது ரூட்..!

20-11-21/14.55pm

பொள்ளாச்சி ; திமுக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை வரவேற்க பொள்ளாச்சியில் உள்ள அதிகாரிகள் செய்த காரியம் மக்களிடையே வெறுப்பை உண்டுபண்ணியுள்ளது.

தமிழக மின்வாரிய அமைச்சர் செந்தில் பாலாஜி மக்கள் சபை என்கிற பெயரில் கோவை மாவட்டம் முழுவதும் பொதுமக்களிடம் மனுக்களை பெற்று வருகிறார். இந்நிலையில் நேற்று அமைச்சர் செந்தில் பாலாஜி வருவதையொட்டி பொள்ளாச்சி நகராட்சி நிர்வாக அதிகாரிகள் பொதுமக்களுக்கு கொண்டு செல்லும் குடிநீர் லாரிகளை பயன்படுத்தி சாலைகளை சுத்தம் செய்தது பரபரப்பை கிளப்பியுள்ளது.

`

அமைச்சர் வரும் நேரம் சாலைகள் சுத்தமாக இருக்கவேண்டும் என கூறி 5000 லிட்டர் கொள்ளவுள்ள குடிநீர் கொண்ட ஐந்து லாரிகளை பயன்படுத்தி சாலையை சுத்தம் செய்திருக்கின்றனர். பொள்ளாச்சி பகுதி மக்கள் குடிநீரின்றி அல்லல்பட்டுக் கொண்டிருக்க அமைச்சரை குளிர்விக்க அதிகாரிகள் செய்த இந்த காரியம் வெகுஜன வெறுப்பை உண்டுபண்ணியுள்ளது.

```
```

மழைக்காலத்தில் மின் மோட்டர்களில் ஏற்பட்ட பாதிப்பால் பத்துநாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்கப்படும் சூழலில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு செல்லும் குடிநீரை அதிகாரிகள் வீணடித்தது திமுகவின் நிர்வாக குறைபாடுகளை வெளிச்சம் போட்டு காண்பிக்கிறது என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

…..உங்கள் பீமா