Saturday, July 27, 2024
Home > செய்திகள் > மதம் மாற்ற வந்தவர்களை மன்னிப்பு கேக்க வைத்த கிராமத்தினர்..! ஒடிஸாவை தொடர்ந்து தமிழகத்திலும் அதிரடி..!

மதம் மாற்ற வந்தவர்களை மன்னிப்பு கேக்க வைத்த கிராமத்தினர்..! ஒடிஸாவை தொடர்ந்து தமிழகத்திலும் அதிரடி..!

ஒடிசா மாநிலம் சுந்தர்கார்க் மாவட்டத்தில் உள்ள தன்கரதிகி எனும் கிராமத்திற்க்கு கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக தொடர்ந்து சென்ற மிஷனரி கும்பல்கள் அந்த கிராமத்து மக்களை மதம் மாற்ற முயன்று வந்தனர். கிராமத்து பெரியவர்கள் ஒருவருடமாக எவ்வளவோ எடுத்துக் கூறியும் விடாமல் வந்து மதம் மாற்றும் முயற்சியில் ஈடுபட்டதாக தெரிகிறது.

நேற்று மீண்டும் மதம் மாற்றும் முயற்சியில் ஈடுபட முனைந்தபோது கிராமத்து மக்கள் ஒன்று கூடி மதம் மாற்ற வந்த பாதிரியார் மற்றும் உடன் இருந்தவர்களை முற்றுகையிட்டு ஒரு அறையில் அடைத்து வைத்ததாக கூறப்படுகிறது.

அதன்பின்னர் அந்த பாதிரியாரிடம் மன்னிப்பு கடிதம் மற்றும் இனி இங்கு வரமாட்டோம் என உறுதிமொழிப் பத்திரம் வாங்கிய பின்னரே வெளியில் விட்டிருக்கின்றனர். பாதிரியாரும் உடன்வந்தவர்களும் தப்பித்தோம் பிழைத்தோம் என தலைதெறிக்க ஓடியிருக்கின்றனர்.

`

இதே போல ஒரு சம்பவம் தமிழகத்திலும் அரங்கேறியிருக்கிறது.மதம் மாற்ற வந்தவர்களை அருகில் உள்ள அம்மன் கோவிலுக்கு அழைத்து சென்றிருக்கின்றனர். அங்கு அவர்களிடம் அவர்கள் செய்த தவறை உணர்த்தியிருக்கின்றனர்.

“நாங்கள் செய்ததற்கு மன்னிப்பு கேட்கிறோம். இனி மதம் மாற்ற முயற்சி செய்ய மாட்டோம். நாங்கள் செய்தது தவறு” என மன்னிப்பு கேட்டு வீடியோவில் பேசியிருக்கின்றனர். இணையத்தில் பரவும் இந்த வீடியோ எப்போது எங்கே எடுக்கப்பட்டது என உறுதியான தகவல் தெரியவில்லை.

```
```

….உங்கள் பீமா

#conversioaracket #odissa #tamilnadu #christianity