Thursday, March 28, 2024
Home > அரசியல் > காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் கிசுகிசுக்கப்பட்ட பெண்ணின் நிலைமை..!

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் கிசுகிசுக்கப்பட்ட பெண்ணின் நிலைமை..!

26-11-21/ 5.44am

உத்திரபிரதேசம் : 2018ல் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் இணைத்துவைத்து ஒரு இளம்பெண் கிசுகிசுக்கப்பட்டார். அந்த பெண்ணிற்கு தேர்தல் சீட்டும் வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

“இரு மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களை திரினாமூலுக்கு பறிகொடுத்த காங்கிரஸ் தற்போது உத்திரபிரதேச இளம் தலைவர்களையும் இழந்துள்ளது”

உத்திரபிரதேசத்தில் காங்கிரஸ் தொகுதியான ரேபரேலியயை சேர்ந்தவர் அதிதி சிங். அந்த தொகுதியில் அவருக்கு 2017ல் சீட்டு ஒதுக்கப்பட்டு மிக சொற்பமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். அதை தொடர்ந்து ராகுலின் உத்திரபிரதேச வருகையின் போதெல்லாம் அதிதி உடன் இருப்பார். இதனால் சமூகவலைத்தளங்களில் அதிதி ராகுலை திருமணம் செய்யப்போகிறார் என பரவ ஆரம்பித்தது.

`

இரு தரப்பிலும் அதற்க்கான விளக்கம் கொடுக்கப்படாததால் பத்திரிக்கைகளில் செய்தியாக வெளிவந்தது. அதையடுத்த சில நாட்களில் காங்கிரஸ் தலைமையின் அழுத்தம் காரணமாக அதிதி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் எங்கள் கட்சி தொடர்பின்றி வேறு எதுவும் இல்லை. நாங்கள் திருமணம் செய்துகொள்ளப்பபோவதாக பரவும் செய்தி முழு பொய் என அறிவித்தார்.

```
```

ரேபரேலி தொகுதியை சேர்ந்த காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரான அதிதி சிங்கும் அஜாம்கார்க் தொகுதி பகுஜன் சமாஜ் கட்சி சட்டமன்ற உறுப்பினரான வந்தனா சிங் என்பவரும் நேற்று உத்திரபிரதேச பிஜேபி தலைவர் ஸ்வதந்தர தேவ் சிங் தலைமையில் பிஜேபியில் தங்களை இணைத்துக்கொண்டனர். ஏற்கனவே இரு மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களை திரினாமூலுக்கு பறிகொடுத்த காங்கிரஸ் தற்போது உத்திரபிரதேச இளம் தலைவர்களையும் இழந்துள்ளது.

…..உங்கள் பீமா