Friday, March 29, 2024
Home > செய்திகள் > அதிரடி காட்டிய அமைச்சர் அன்பில் மகேஷ்..! அரண்டு போன விவசாயி..!

அதிரடி காட்டிய அமைச்சர் அன்பில் மகேஷ்..! அரண்டு போன விவசாயி..!

25-11-21/ 16.00pm

திருச்சி : மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை அழைப்பின் பெயரில் சுற்றிப்பார்க்க சென்ற அமைச்சர் அன்பில் மகேஷ் காட்டிய அதிரடியால் விவசாயி ஒருவர் அரண்டு போனார்.

தமிழகத்தில் பெய்து வரும் தொடர்மழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சுற்றிப்பார்க்க வரும் திமுக அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் தொடர்ந்து பொதுமக்களை மிரட்டி வருவது தொடர்கதையாக உள்ளது. அமைச்சர் சேகர் பாபு தனது தொகுதியில் நிவாரண உதவி கேட்டு வந்தவர்களை மிரட்டியிருந்தார்.

அமைச்சர் நேரு நாங்கள் என்ன மண்வெட்டி கொண்டா தூர்வார முடியும் என நிருபர்களிடம் கேட்டு அவர்களை மிரட்டினார். அமைச்சர் நாசர் சமீபத்தில் ஒரு விவசாயி கையை பிடித்து இழுத்து தள்ளினார். மேலும் நேற்று நிருபர்களை அமைச்சர் நாசர் தரக்குறைவாக பேசி அந்த வீடியோ வைரல் ஆனது குறிப்பிடத்தக்கது.

`

இந்நிலையில் திருச்சி தெற்கு கொட்ட பொறுப்பாளர் மற்றும் திமுக அமைச்சர் அன்பில் மகேஷை தங்களது விலை நிலங்களுக்கு வந்து அதன் பரிதாப நிலையை பார்க்குமாறு விவசாயிகள் தொடர் கோரிக்கை எழுப்பிவந்தனர். அதையடுத்து அங்கு சுற்றி பார்க்க சென்ற அமைச்சர் அன்பில் மகேஷை அங்கிருந்த விவசாயி ஒருவர் வயலில் இறங்கி பாருங்கள் என கூறினார்.

```
```

அதற்க்கு அமைச்சர் அன்பில் யோவ் போய்யா என கடிந்துகொண்டதோடு மட்டுமல்லாமல் அந்த ஏழை விவசாயியை முறைத்துக் கொண்டே நின்றார். அதன் பிறகு அந்த விவசாயியை அப்புறப்படுத்தியதாக தெரிகிறது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.

….உங்கள் பீமா