Tuesday, March 19, 2024
Home > அரசியல் > பை பை ராகுல் காந்தி..! தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை சுளீர்

பை பை ராகுல் காந்தி..! தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை சுளீர்

3-2-22/10.30am

டெல்லி : பாராளுமன்றத்தில் எப்போதுமே தூங்கி வழியும் ராகுல்காந்தி நீண்ட நாட்கள் கழித்து தனது திருவாய் மலர்ந்தார். ரபேல் விமான விஷயத்தில் முன்னுக்குப்பின் முரணான தகவலை கூறி நீதிமன்றத்திடம் மன்னிப்புக்கேட்டது போல நேற்று திடீரென பொங்கிய ராகுல் அடுக்கடுக்கான பன்ச் வசனங்களை பேசினார்.

“மத்திய பிஜேபி அரசு நீட் விஷயத்தில் தமிழகத்தை வஞ்சிக்கிறது. தமிழகத்தின் குரலை செவிமடுக்கவில்லை. பிஜேபியால் தமிழகத்தை ஒருபோதும் ஆள முடியாது” என கோர்வையாக பேசினார். ஆனால் இந்தியாவில்தான் தமிழகம் இருக்கிறது என்றும் மத்தியில் ஆள்வது பிஜேபி என்பதையும் மறந்து பேசவேண்டும் என்பதற்காக எதையெதையோ பேசிவிட்டார் என பிஜேபியினர் விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை நேற்று ராகுலுக்கு பதிலடியாக ” சபைக்கு ஒவ்வாத வார்த்தையை சம்மந்தமில்லாமல் ராகுல் பேசியதை கண்டு ஆச்சர்யப்படுகிறேன். தமிழக பிஜேபியால் ஆட்சிக்கு வரமுடியாது என ராகுல் கூறியிருக்கிறார். தமிழக மண்ணின் மைந்தனாக சொல்கிறேன். விரைவில் பிஜேபி தமிழகத்தை ஆளும்.

`

உங்களது தாத்தா உங்களது தந்தையார் மூலம் 1965 மற்றும் 1986களில் தமிழகத்தில் ஹிந்தியை திணிக்க முயன்றது வரலாறு. காமராஜர் அய்யாவை அவமானப்படுத்தினீர்கள். 1974ல் கச்சத்தீவை தாரைவார்த்தீர்கள் ஈழத்தமிழர்கள் கொத்து கொத்தாக மடிய நீங்கள் காரணமாயிருந்தீர்கள். 2009 நினைவிருக்கிறதா. நம்து மாண்புமிகு பிரதமர் மோடி 50000க்கும் மேற்பட்டோருக்கு வீடுகள் கட்டி கொடுத்து அவர்கள் வாழ்வை மீட்டுக்கொடுத்திருக்கிறார்.

```
```

ஜல்லிக்கட்டுக்கு தடைவிதித்தீர்கள். அதன் விளைவு தமிழகத்தில் அவசரசிகிச்சை பிரிவில் திமுகவின் உதவியோடு சுவாசத்தை பெற்றுக்கொண்டிருக்கிறீர்கள். நங்கள் புதுச்சேரியில் ஆட்சியில் இருக்கிறோம். அடுத்து தமிழகம் தான். வரலாற்றை மறக்காதீர்கள். அமேதியில் உங்களுக்கு என்ன நடந்ததோ அதுவே தமிழகத்திலும் நடக்கும். பை பை சார். இடைப்பட்ட காலத்தில் நீங்கள் அடுத்த பொய்யை உருவாக்க ஓடுங்கள்” என சுளீரென பதிலடி கொடுத்துள்ளார் அண்ணாமலை.

…..உங்கள் பீமா