Friday, March 29, 2024
Home > செய்திகள் > தீவிரவாதிகள் வெறிச்செயல்..! ராணுவ வீரர்கள் மற்றும் ராணுவ அதிகாரி குடும்பத்துடன் பலி..!

தீவிரவாதிகள் வெறிச்செயல்..! ராணுவ வீரர்கள் மற்றும் ராணுவ அதிகாரி குடும்பத்துடன் பலி..!

13-11-21/16.00pm

இந்தியா : மணிப்பூரில் தீவிரவாதிகள் பதுங்கியிருந்து தாக்கியதில் ராணுவ வீரர்கள் மற்றும் ராணுவ அதிகாரி மனைவி மற்றும் குழந்தை ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

மணிப்பூர் சுராசந்த் புர் மாவட்டத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியை மேற்பார்வையிட அஸ்ஸாம் ரைபிள் யூனிட்டை சேர்ந்த கலோனியல் (கமாண்டிங் அதிகாரி) விப்லவ் திரிபாதி அவரது மனைவி மற்றும் மகன் ராணுவத்துக்கு சொந்தமான கான்வாயில் சென்றனர். காலை 10 மணியளவில் அவர்கள் பட்டாலியன் தலைமையகத்திற்கு திரும்புகையில் அதிகாரியின் கான்வாய் மீது IED தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அதன்பின்னர் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் சராமாரியாக சுடத்தொடங்கியுள்ளனர். அதில் விப்லவ் அவரது மனைவி மற்றும் மகன் கான்வாய் ஓட்டுநர் மற்றும் ஜவான்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். வெளியான செய்திகளின்படி இதுவரை 7 பேர் உயிர்த்தியாகம் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் இந்த தாக்குதலை மணிப்பூரை தலைமையகமாக கொண்ட பீப்பிள்ஸ் லிப்ரெசன் ஆர்மி நடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

`

மணிப்பூர் மாநில முதல்வர் பிரென் சிங் இந்த செய்தியை உறுதிப்படுத்தியுள்ளார். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பாரத பிரதமர் மோடி மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வாஸ் உள்ளிட்ட பல முதல்வர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த தீவிரவாத தாக்குதலுக்கு பின்னால் எதுவும் அரசியல் சாதியோ இல்லையெனில் வெளிநாட்டு குழுவோ பின்னணியில் இருக்கிறதா என அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவத்தால் மணிப்பூர் மாநிலம் பீதியில் உறைந்துள்ளது. மேலும் அஸ்ஸாம் ரைபிள் யூனிட் தலைமையகமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

```
```

…..உங்கள் பீமா

image credit ; ndtv