Monday, May 13, 2024
Home > செய்திகள் > கடலூரில் பதட்டம்..! மீண்டும் நள்ளிரவில் பிஜேபி பிரமுகர் கைது..! போலீசார் அராஜகம்..!

கடலூரில் பதட்டம்..! மீண்டும் நள்ளிரவில் பிஜேபி பிரமுகர் கைது..! போலீசார் அராஜகம்..!

23-11-21/10.30am

கடலூர் : மீண்டும் பிஜேபி பிரமுகர் ஒருவர் நள்ளிரவில் கைது செய்யப்பட்டிருப்பது கடலூரில் பதட்டத்தை அதிகரித்துள்ளது.

கடலூர் சிறையில் பாஜக பிரமுகர் கல்யாணராமன் அடைக்கப்பட்டுள்ளார். அவரை சந்திக்க வரும் நபர்களுக்கு அனுமதி மறுப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் கடந்த சில நாட்களுக்கு முன் சிறையில் கல்யாணராமனை சந்திக்க சென்ற தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலையிடம் சிறைத்துறை அதிகாரிகள் அராஜகமாய் நடந்து அனுமதி மறுத்ததாக சொல்லப்படுகிறது.

`

கடலூரில் கல்யாணராமனை சந்திக்க வருபவர்களுக்கு உறுதுணையாய் இருந்து சிறைக்கு சந்திக்க அழைத்து செல்பவர் ஜே.டி மூர்த்தி. இவர் பாஜக கிழக்கு மாவட்ட மீனவரணி தலைவராக இருக்கிறார். இந்நிலையில் நேற்று இரவு பத்து மணிக்கு போலீசார் அராஜகமான முறையில் J D மூர்த்தியை கைது செய்து கடலூர் புதுநகர் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.

```
```

மேலும் அவரது செல்போனை பிடிங்கி வைத்துக் கொண்ட காவல்துறையினர் யாரிடமும் தகவல் தெரிவிக்கக்கூடாது என மிரட்டியதாக சொல்லப்படுகிறது. மேலும் தகவல் கசந்தும் பிஜேபி தொண்டர்கள் நிர்வாகிகள் கடலூர் புது நகர் காவல்நிலையத்துக்கு சென்று கொண்டிருக்கின்றனர். தமிழகத்தில் பிஜேபியின் அசுர வளர்ச்சியை பொறுக்காத திமுக இப்படி கைது படலத்தை தொடங்கியுள்ளதாக குற்றசாட்டை முன்வைக்கின்றனர் கடலூர் பிஜேபி நிர்வாகிகள்.