Friday, February 7, 2025
Home > செய்திகள் > இருளர் சமூகத்தை ஏமாற்றினாரா சூர்யா..? பட விளம்பரத்துக்கு பயன்படுத்தப்பட்ட மக்களின் பணம்..??

இருளர் சமூகத்தை ஏமாற்றினாரா சூர்யா..? பட விளம்பரத்துக்கு பயன்படுத்தப்பட்ட மக்களின் பணம்..??

9-11-21 / 5.38am

சென்னை; இருளர் எஜூகேஷனல் டிரஸ்ட் எனும் பெயரில் நடிகர் சூர்யா முதல்வரிடம் ஒரு கோடிக்கான காசோலையை வழங்கினார். தற்போது அது பெருத்த சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதுகுறித்து செல்வகுமார் என்பவர் தனது பதிவில் சில ஆதாரங்களை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில் கூறப்படுவதாவது, “இந்த பழங்குடி இருளர் சமூகத்திற்கு 1 கோடி நன்கொடை கொடுத்ததில் ‘திராவிடத்தனம்’ பண்ணியிருக்கார் நடிகர் சூர்யா. அந்த 1 கோடி சூர்யாவின் சம்பள பணமோ, 2D தயாரிப்பு நிறுவனத்தின் சொந்த பணமோ அல்ல. சரியான குழந்தைகளை தேர்ந்தெடுத்து தன்னார்வலர்கள் துணையுடன் சிறப்பான முறையில் படிக்க வைப்பார் என்று பொதுமக்கள் அகரம் அறக்கட்டளைக்கு நன்கொடையாக கொடுத்த பணத்தை சூர்யா தன்னுடைய திரைப்பட விளம்பரத்திற்கு பயன்படுத்தி கொண்டார்.

காசோலையில் இருக்கும் ‘PAZHANKUDI IRULAR EDUCATIONAL TRUST’ என்ற பெயரில் NGO அரசு இணைய தளத்தில் இல்லை. இது புதிதாக தொடங்கபட்டதா. இன்னும் பதிவு செய்யபடவில்லையா. அதன் நிர்வாகிகள் யார் யார் ? போன்ற பல சந்தேகங்கள் எழுகிறது, இதை சூர்யா தெளிவு படுத்த வேண்டும்.

`

மேலும், IRULAR என்ற வார்த்தை பெயரில் கொண்ட அறக்கட்டளை இந்தியாவில் எங்கும் இல்லை. அகரம் பவுன்டேசன் நிர்வாகி TJ ஞானவேல் தான் ஜெய் பீம் படத்தின் இயக்குனர் என்பது கூடுதல் தகவல்.
இவர் வேறு Studio Green ஞானவேல்ராஜா வேறு.” என குறிப்பிட்டுள்ளார்.

https://ngodarpan.gov.in/index.php/search/

```
```

இந்நிலையில் இது குறித்த வீடியோ ஒன்றும் ஆதாரங்களுடன் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து சூர்யா தரப்பிடம் விளக்கம் கேட்க மெட்ராஸ் டெலிக்ராம் நிருபர் தொடர்பு கொண்டபோது பதிலளிக்க மறுத்துவிட்டனர்.

……உங்கள் பீமா