Friday, May 3, 2024
Home > செய்திகள் > மேற்குவங்கத்தில் கொடூரம்..! குழந்தைகள் உட்பட 12 பேர் உயிருடன் எரித்துக்கொலை..!

மேற்குவங்கத்தில் கொடூரம்..! குழந்தைகள் உட்பட 12 பேர் உயிருடன் எரித்துக்கொலை..!

23-3-22/10.49AM

மேற்குவங்கம் : மேற்குவங்கத்தில் ஜோதிபாசு ஆரம்பித்துவைத்த அரசியல் பழிவாங்கல் கொலைகள் தற்போதுவரை தொடர்ந்துவருகிறது. கம்யூனிச குண்டர்களையெல்லாம் ஓரம்கட்டி கொலைகாரர்கள் கூடாரமாக திரிணாமுல் செயல்பட்டுவருவதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்துவருகின்றன.

கடந்த திங்களன்று பிர்பம் பகுதியில் உள்ள ரம்புர்ஹட் நகரில் திரிணாமுல் பஞ்சாயத்து தலைவர் ஷேக் வெடிகுண்டு வீசி கொல்லப்பட்டார். இதையடுத்து இந்த விஷயம் காட்டுத்தீ போல பிர்பம் முழுவதும் பரவியது. அதையடுத்து நேற்று திரிணாமூல் குண்டர்கள் வன்முறையில் இறங்கியதாக தெரிகிறது. ரம்புர்ஹட் கிராமத்தில் கூடிய கும்பல் அனைத்து வீடுகளிலும் கல்லெறிய தொடங்கியது.

அதன்பிறகும் ஆத்திரம் அடங்காத கும்பல் அனைத்து வீடுகளையும் தீவைத்து எரிக்க தொடங்கியது. இதில் 10 பெண்கள் இரண்டு குழந்தைகள் உட்பட 12 பேர் உடல்கருகி உயிரிழந்தனர். இதில் ஒரே வீட்டில் பதுங்கியிருந்த ஏழு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

`

இதில் கொடுமை என்னவெனில் இந்தசம்பவத்தை போலீசார் விசாரிக்க தொடங்குமுன்னரே திரிணாமுல் தலைவர் கொடுத்த அறிக்கை அனைவரையும் கொந்தளிக்க செய்துள்ளது.

திருணாமூல் மாநிலதலைவர் கூறியதாவது ” பிர்பம் பகுதியில் ஏற்பட்ட உயரமின்னழுத்த மின்கசிவு காரணமாக தீ பரவியதால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது” என கூறியுள்ளார்.

```
```

மேற்குவங்க ஆளுநர் ஜெகதீப் கூறுகையில், சட்டம் ஒழுங்கு முறையாக இல்லை” என தனது வருத்தத்தை தெரிவித்தார்.

மேலும் உள்துறை அமித்ஷா இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு மமதாவின் ஆட்சியை கலைக்க வேண்டும் என பிஜேபியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

…..உங்கள் பீமா