23-322/12.00pm
புதுதில்லி : நேற்று பாராளுமன்றத்தில் சிவில் விமானபோக்குவரத்து துறைக்கான மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. அதில் திரிணாமூல் காங்கிரஸ் சார்பில் பேசிய மஹுவா மொய்த்ரா மஹாத்மா அடல் பிஹாரி வாஜ்பாய் குறித்து பேசினார்.
kulநடந்து முடிந்த ஐந்துமாநில சட்டமன்ற தேர்தல்களில் நான்கு மாநிலங்களில் பிஜேபி ஆட்சியை தக்கவைத்துக்கொண்டது. பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வை மற்றும் செயல்படுத்தப்பட்ட மக்கள்நல திட்டங்கள் நேரடியாக பயனாளிகளை சென்று சேர்ந்ததால் மக்கள் பிரதமர் மீது நம்பிக்கைவைத்து மீண்டும் பிஜேபிக்கு வாக்களித்து அமோக வெற்றியை பரிசளித்துள்ளனர். இதை பாராட்டும் விதமாக கடந்த சிலநாட்களுக்குமுன்னர் பாராளுமன்றத்தில் மோடி மோடி என குரலெழுப்பப்பட்டது.
இதை குறிப்பிட்டு பேசிய திரிணமூல் எம்பி மஹுவா மொய்த்ரா வாஜ்பாய் 1972 நாடாளுமன்றத்தில் பேசியதை நினைவுகூர்ந்தார்.

மஹாத்மா வாஜ்பாய் பேசுகையில் ” அனைத்து அதிகாரமும் பிரதமர் கையிலேயே உள்ளது. பிரதமர் உச்சியில் நிற்கிறார். அவரது சகாக்கள் அவரது காலடியில் கிடக்கின்றனர். ரேடியோவில் இருந்து திரையரங்கம் வரை பிரதமர் புகழே பாடப்படுகிறது.
ஒரு தனிமனிதன் சர்வாதிகாரியாக நிலைநிறுத்தப்படும் அபாயகரமான சூழல் நிலவுகிறது. எதிர்க்கட்சிகள் இதை எதிர்த்து போராட முடியாத நிலையில் உள்ளது” என குறிப்பிட்டிருந்தார். இதை நினைவுகூறிய மொய்த்ரா தற்போதும் அப்படியே நடப்பதாக தெரிவித்தார். ஆனால் கடந்த சட்டமன்றதேர்தலில் திரிணாமுல் வெற்றிபெற்ற போது இரண்டுலட்சத்திற்கும் மேலானோர் அகதியாக அன்டைமாநிலங்களுக்கு விரட்டியடிக்கப்பட்டதையோ அல்லது நேற்று உயிரோடு கொளுத்தப்பட்ட 12 உயிர்களை பற்றி வாய்திறக்காத மொய்த்ரா வாஜ்பாய் குறித்து பேச தகுதியில்லாதவர் என பிஜேபியினர் விமர்சித்து வருகின்றனர்.
…..உங்கள் பீமா