Saturday, May 4, 2024
Home > செய்திகள் > பாட்சா திரைப்பட பாணியில் கம்பத்தில் கட்டிவைத்து பெண் மீது சரமாரி தாக்குதல்…!

பாட்சா திரைப்பட பாணியில் கம்பத்தில் கட்டிவைத்து பெண் மீது சரமாரி தாக்குதல்…!

27-1-22/11.20AM

அருப்புக்கோட்டை : விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே 14 பேர் கொண்ட கும்பல் ஒன்று 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரை கட்டிவைத்து தாக்கிய சம்பவம் அனைவரையும் நிலைகுலைய செய்துள்ளது.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை திருச்சுழி அருகே அமைந்துள்ளது கே வாகைக்குளம் கிராமம். இந்த கிராமத்தில் வசிப்பவர் மீனாக்ஷி. இவரது மகன் வேறு சாதி பெண் ஒருவரை காதலித்து வந்தார். இந்நிலையில் கடந்த ஜனவரி 22ல் காதலித்த பெண்ணை கரம்பிடித்த மீனாட்சியின் மகன் காவல்நிலையத்தில் தஞ்சம் புகுந்தார்.

மணமக்கள் இருவரும் தங்களுக்கு பாதுகாப்புகோரி அருப்புக்கோட்டை அனைத்துமகளிர் காவல்நிலையத்தில் மனு ஒன்றை அளித்திருந்தனர். இதனிடையே நேற்று முன்தினம் ஜனவரி 25 அன்று மீனாட்சியின் வீடு புகுந்த கும்பல் ஒன்று அவரின் தலைமுடியை பிடித்து வெளியே இழுத்துவந்து அருகில் உள்ள ஒரு மின்கம்பத்தில் கட்டிவைத்ததாக கூறப்படுகிறது.

`

மேலும் ஆத்திரத்தில் இருந்த அந்த கும்பல் மீனாக்ஷியை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. அதில் அந்த பெண் அங்கேயே மயங்கி சரிய அதன்பின்னர் அருப்புக்கோட்டை அரசுமருத்துவமனையில் அவரை அனுமதித்துள்ளனர் அக்கம்பக்கத்தினர். அதன்பின்னர் பாதிக்கப்பட்ட மீனாக்ஷி பரளச்சி காவல்நிலையத்தில் புகாரளித்ததன் பேரில் 14 பேர் மீது வழக்கு பதிந்துள்ளனர்.

```
```

மணப்பெண்ணின் தாயார் முறையற்ற வார்த்தையில் ஆபாசமாக பேசி தாக்கியதால் அவர்பெயரும் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிகிறது, சுதந்திர போராட்ட தியாகி, செம்மல், திராவிட சிந்தனையின் ஊற்றான பெரியாரின் சித்தாந்தத்தை பின்தொடரும் திமுகவின் தொகுதியான விருதுநகர் மாவட்டத்தில் ஒரு பெண்ணுக்கு நேர்ந்த இந்த அவலத்தை திமுகவினரே கண்டிக்காமல் இருப்பது பெரும் அதிர்ச்சியை உண்டுபண்ணியிருப்பதாக அருப்புக்கோட்டை மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

….உங்கள் பீமா