7-3-22/10.43AM
சென்னை : ரஷ்யா உக்ரைன் போரில் சொந்த நாட்டு மக்களை காப்பாற்ற முடியாமல் உலக நாடுகள் கைபிசைந்து நிற்கையில் களமிறங்கிய தமிழக முதல்வர் இந்திய அரசு அனைவரையும் மீட்டபின்னர் குழு ஒன்றை அதிரடியாக அமைத்து நான்கு முக்கியஸ்தர்களை நியமித்தார்.
உக்ரைன் மீட்புக்குழு என நோட்டீஸ் ஒட்டப்பட்ட ஒரு வாகனம் சென்னையில் வேகமாக சுற்றிவந்தது. இந்நிலையில் திடீரென 878 தமிழக மாணவர்கள் மீட்டெடுக்கப்பட்டதாகவும் அதற்கு மூன்று கோடியளவில் செலவாகியிருப்பதாகவும் செஞ்சி மஸ்தான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும் எப்படி மாணவர்கள் மீட்கப்பட்டார்கள் என ஒரு திமுக அபிமானி தெளிவான விரிவான கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் “எப்படி சாதித்தது தமிழக குழு: முதலில் போர் நடக்காத சாலை பகுதிகளை கண்டுபிடித்துள்ளனர். இதன் மூலம் ருமேனிய எல்லைக்கு எப்படி செல்வது என்று மேப் மூலம் கண்டுபிடித்துள்ளனர். அதன்படி Pisochyn முதல் ருமேனியா அருகே இருக்கும் Ternopil பகுதிக்கு செல்வதே சிறந்த வழி என்று கண்டுபிடித்துள்ளனர்.இதையடுத்து பேருந்து ஏற்பாடு செய்ய வேண்டும். இதுதான் சிக்கலான விஷயமே. இதற்காக உக்ரைனில் உள்ள கார்கிவ் பல்கலையில் மருத்துவம் படித்த டாக்டர் ஏபி விஜயகுமாரை அணுகி உள்ளனர். சென்னையில் இருக்கும் இவருக்கு உக்ரைனில் சிலரை தெரியும்.

அவர்கள் மூலம் உக்ரைனில் 2 ஏஜெண்ட்களை பிடித்து உள்ளனர். பின்னர் அந்த ஏஜெண்டுகளிடம் பேருந்துகளை ஏற்பாடு செய்ய பணம் கொடுத்து உள்ளனர். ஒரு மாணவருக்கு 500 டாலர் என்று 17500 டாலர் கொடுக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு அரசு மூலம் சென்னையில் உள்ள ஐஓபி வழியாக இந்த பணம் வழங்கப்பட்டது. இதையடுத்து அந்த பேருந்து எடுக்கப்பட்டு அவர்கள் வெள்ளிக்கிழமைஇரவு புறப்பட்டனர்.
நேற்று ஒரு நகரத்தில் பேருந்து சில மணி நேரம் நின்று இன்று மீண்டும் எல்லை நோக்கி புறப்பட்டு உள்ளது. இது எல்லாமே இந்திய வெளியுறவுத் துறை அனுமதியுடனே நடந்துள்ளது. தமிழ் நாடு அரசு அமைத்த குழு மிக்ஸர் சாப்பிட்டு விட்டு வெறும் வாயால் வடை சுடாமல் சாதித்துள்ளது” என அந்த திடுக்கிடும் பின்னணியை விவரித்துள்ளார்.
….உங்கள் பீமா