19-4-22/11.42AM
சென்னை : தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் செயலாளர் ஜி.ஆர். வெங்கடேசனின் தந்தை லயன்ஸ் அம்பலம் ராஜபாண்டியன் நாடாரின் படத்திறப்புவிழா சென்னையில் நடைபெற்றது. இதில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை. தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதில் பேசிய ஜி.கே.வாசன் ” தமிழ்நாட்டின் தலையெழுத்தை வரும் நாட்களில் மாற்றவேண்டும். அதுபோல ஒத்தகருத்துடையவர்கள் ஒன்றிணையவேண்டும்” என கூறினார். இதைத்தொடர்ந்து பேசிய அண்ணாமலை “எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக ஆட்சி பொற்காலம். அவருடன் இணைந்திருப்பது பாஜகவுக்கும் எனக்கும் பெருமை.
ஒரு முதல்வர் எப்படி இருக்கவேண்டும் என ஐபிஎஸ் அதிகாரிகள் எதிர்பார்ப்பார்களோ அதுபோன்ற ஒரு முதல்வராக இருந்து பணியாற்றியவர் எடப்பாடி பழனிச்சாமி” என அதிமுக மற்றும் எடப்பாடிக்கு புகழாரம் சூட்டினார் தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை.
இதன்மூலம் வரும் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி தொடரும் என சூசகமாக அண்ணாமலை கூறியுள்ளார். மேலும் வரும் தேர்தல்களில் தமாகா அதிமுக புதிய தமிழகம் போன்ற கட்சிகளுடன் சேர்ந்தே போட்டியிடும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தல்களில் பிஜேபி தனது பலத்தை நிரூபித்து காட்டியிருந்தது. இதனால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் 10 முதல் 12 இடங்களை கேட்கலாம் என யூகங்கள் பரவியுள்ளது.
…..உங்கள் பீமா