Saturday, May 4, 2024
Home > அரசியல் > எதுய்யா நிஜம்..? பங்கம் பண்ணிய பிஜேபி மாநில தலைவர் அண்ணாமலை..!

எதுய்யா நிஜம்..? பங்கம் பண்ணிய பிஜேபி மாநில தலைவர் அண்ணாமலை..!

சென்னை : திமுக மற்றும் அதன் ஆதரவு கூட்டணிக்கட்சிகளிடம் கேள்வியெழுப்ப தயங்கும் தமிழக ஊடகங்கள் பிஜேபி நிர்வாகிகள் மற்றும் அதன் தலைவரான அண்ணாமலையிடம் அர்த்தமில்லாத கேள்விகளை முன்வைத்து வருவதாக கமலாலய வட்டாரங்கள் விமர்சித்து வருகின்றன.



இந்நிலையில் கடந்த சிலநாட்களுக்கு முன்னர் அண்ணாமலை விதண்டாவாதமாக கேள்வியெழுப்பிய பத்திரிக்கையாளர் ஒருவரிடம் ” என்னிடம் குதர்க்கமாக கேள்வியெழுப்பி அறிவாலயத்தில் ஒவ்வொரு கேள்விக்கும் 3000 ரூபாய் வாங்குவீர்களா” என்ற ரீதியில் பேசியிருந்தார். ரெட்லைட் மீடியா என்றபோதும் பத்திரிக்கையாளர்களை தாக்கியபோதும் அலுவலகம் புகுந்து பத்திரிக்கை அலுவலகத்தை எதிர்த்தபோதும் மௌனமாயிருந்த ரோஷக்கார ஊடகங்கள் அண்ணாமலை கொடுத்த பதிலில் கொந்தளித்துவிட்டன.

`


press club

அந்த சம்பவத்தில் தொடர்புடைய பத்திரிக்கையாளரே மௌனமாகிவிட்ட நிலையில் மற்ற பத்திரிகையாளர்கள் பொங்கி எழுந்துள்ளனர். சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் சார்பில் ஒரு இருபதுபேர் கொண்ட கூட்டம் சிறிதுநேரம் கூட்டம் கூடி கோஷமிட்டனர். இதுகுறித்து பிஜேபி மாநில தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டரில் கிண்டலடித்துள்ளார்.

```
```

press club protest

“இரண்டு போராட்டங்கள்.இரண்டும் சென்னை பிரஸ் கிளப் பெயரில். எது உண்மையான பிரஸ் கிளப். என்னிடம் கேள்வி கேட்ட சகோதர் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்பதை அறிந்தேன். அவரை வைத்து அறிவாலய கட்சியிடம் நல்ல பெயர் எடுக்க ஆர்ப்பாட்டம் செய்து உள்ளனர்.எனது பேச்சு நியாயம் என்று கருதி போராட்டத்தினை புறக்கணித்த உண்மை செய்தியாளர்களுக்கு மிக்க மிக்க நன்றிகள்.

அதிக அளவில் செய்தியாளர்களை கூட்டி ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களுக்கு தான் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தினை திமுக வழங்கும் என எதிர்பார்கின்றேன். விமலேஷ்வரனா. பாரதி தமிழனா. அணிகள் கைப்பற்ற போவது சென்னை பத்திரிகையாளர் மன்றத்தினை. அரசியல் விளையாட்டுக்களை பொறுத்திருந்து பார்ப்போம். எனது பேச்சு நியாயம் என்று கருதி போராட்டத்தினை புறக்கணித்த உண்மை செய்தியாளர்களுக்கு மிக்க மிக்க நன்றிகள்” என பங்கமாக கலாய்த்துள்ளார்.