Thursday, March 28, 2024
Home > செய்திகள் > விண்ணை பிளந்த அண்ணாமலையின் அன்னூர் முழக்கம்..! பணிந்தது திமுக..! விவசாயிகள் கொண்டாட்டம்..!

விண்ணை பிளந்த அண்ணாமலையின் அன்னூர் முழக்கம்..! பணிந்தது திமுக..! விவசாயிகள் கொண்டாட்டம்..!

5-12-21/11.22am

அன்னூர் : தமிழக திமுக அரசின் விவசாயிகள் விரோதப்போக்கை கண்டித்து தமிழக தலைவர் அண்ணாமலை நேரடியாக அன்னூர் சென்று விவசாயிகளின் குறைகளை கேட்டறிந்தார்.

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் கோயம்புத்தூர் மாவட்டம் அன்னூர் சென்ற தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை நேரடியாக விவசாயிகளின் வீடுகளுக்கு சென்று அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். மேலும் தமிழக திமுக அரசின் விவசாய விரோத போக்கை கண்டித்ததுடன் விவசாயிகளுக்கு பாதுகாப்பாக தமிழக பாஜக மற்றும் மத்திய மோடி அரசு உறுதுணையாக நிற்கும் என உறுதியளித்தார்.

`

மேலும் அன்னூரில் ஒரு செங்கல் கூட நடமுடியாது என திமுகவுக்கு கடும் எச்சரிக்கை விடுத்ததுடன் திட்டத்தை திமுக கைவிடாவிட்டால் விவசாயிகள் வாழ்வாதாரத்தை காக்க விவசாயிகளுடன் சேர்ந்து மாநிலம் தழுவிய போராட்டம் நடைபெறும் என்கிற தொனியில் எச்சரித்திருந்தார். ஏற்கனவே இளைஞர்களின் நாயகனான அண்ணாமலை முன்னெடுத்த போராட்டங்கள் எல்லாம் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

```
```

இந்நிலையில் திமுக அரசு தற்போது திட்டத்தை கைவிட்டுள்ளது. விவாசயிகளின் ஒப்புதல் இல்லாத காரணத்தால் நிலத்தை கையகப்படுத்தும் திட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது என அறிவித்துள்ளது. இதையடுத்து அன்னூர் மற்றும் அதன் சுற்றுப்புற வாழ் விவசாயிகள் தமிழக தலைவர் அண்ணாமலையை வெகுவாக பாராட்டி தங்களது நன்றியை தெரிவித்து வருகின்றனர்.

…..உங்கள் பீமா