16-3-22/16.14pm
உத்திரபிரதேசம் : நடந்துமுடிந்த சட்டமன்ற தேர்தலில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பிஜேபி அரசு மீண்டும் ஆட்சியை தக்கவைத்துக்கொண்டது. வாக்குகள் எண்ணப்படும் முன்பு சமாஜ்வாடி தலைவரான அகிலேஷின் வார்த்தையை கேட்டு மாநிலத்தின் பல இடங்களில் தொண்டர்கள் வாக்கு எண்ணும் மையங்களுக்குள் அதிரடியாக சென்று அரசு வாகனங்களை சோதனையிட்டனர்.
மேலும் பைனாகுலர் கேமரா சகிதமாக சுற்றித்திரிந்ததோடு மட்டுமல்லாமல் அதிகாரிகள் பணிசெய்ய இடைஞ்சலாக இருந்தனர். இதைத்தொடர்ந்து காவல்நிலையங்களில் சமாஜ்வாடி தொண்டர்கள் மீது அதிகாரிகள் வழக்கு பதிந்தனர். வாரணாசியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் திருடப்படுவதாக அகிலேஷ் பரபரப்பு குற்றசாட்டை முன்வைத்தார்.
அவர்சொன்ன அதே நாள் இரவில் 75 மாவட்டங்களில் உள்ள வாக்குசாவடிகளில் சமாஜ்வாடி தொண்டர்கள் குவிந்தனர். மேலும் அரசுவாகனங்களை சோதனையிட்டு சமூகவலைத்தளங்களில் வெளியிட்டனர். இதைத்தொடர்ந்து கிழக்கு உத்திரபிரதேசம் பஸ்தி மாவட்டத்தில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட சமாஜ்வாடி கட்சியினர் மீது ஏழு பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டது. அதேபோல மேற்கு உதிர்ப்பிரதேசத்தில் சமாஜ்வாடியினர் 6 பேர் மற்றும் 30 பேர் மீதுவழக்கு பதியப்பட்டது.
மத்திய உ.பியில் 100 சமாஜ்வாடியினர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. இதுவரை வழக்கு பதியப்பட்டவர்களை இன்று முதல் போலீசார் அதிரடியாக கைதுசெய்து வருகின்றனர். இன்று காலை கைதுசெய்யப்பட்ட சமாஜ்வாடி பிரமுகர் நேற்று பிஜேபி கூட்டணிக்கட்சியான நிஷாத் க்கு தாவினார் என்பது குறிப்பிடத்தக்து. கைது நடவடிக்கையை தொடர்ந்து பலர் தலைமறைவாகிவருகின்றனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில் “புல்டோசர் பாபா தனது திருவிளையாடலை ஆரம்பித்துவிட்டார். இனி நாங்கள் எவ்வித பயமும் இல்லாமல் அமைதியாக இருப்போம்” என குறிப்பிட்டனர்.
…..உங்கள் பீமா