Monday, May 6, 2024
Home > செய்திகள் > குடும்ப உறுப்பினர்கள் கதறல்..! மாணவனை கொலை செய்து வீடியோ வெளியிட்ட கொலைகாரர்கள்..!

குடும்ப உறுப்பினர்கள் கதறல்..! மாணவனை கொலை செய்து வீடியோ வெளியிட்ட கொலைகாரர்கள்..!

11-11-21/ 6.05am

மாணவனை கொலை செய்து அந்த வீடியோவை கொலைகாரர்கள் வெளியிட்டிருப்பது பதட்டத்தை அதிகரித்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் கோட்டா கேசவபுரா பகுதியில் வசிப்பவர் 12ம் வகுப்பு படிக்கும் ராஜ்குமார் ஷர்மா. இவர் கடந்த ஞாயிறன்று மாலை 4மணிக்கு வீட்டிலிருந்து கிளம்பியவர் காணாமல் போனதாக மகாவீர் பகுதி காவல் நிலையத்தில் பெற்றோர்கள் புகார் அளித்தனர். அதையடுத்து மாணவனை காவல்துறை தீவிரமாக தேடிவந்தனர்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை பர்தா பஸ்தி பகுதியின் அருகே உள்ள வனப்பகுதியில் அடையாளம் தெரியாத சடலம் கிடப்பதாக கிடைத்த தகவலை அடுத்து காவல்துறையினர் விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றினர். மார்பு தொடை கழுத்து இடுப்பு என உடலின் பல இடங்களில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு அந்த மாணவன் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது,

`

மேலும் பிரேதம் கிடந்த இடத்திலிருந்து 400 மீட்டர் வரை ரத்தத்துளிகள் சிதறி கிடப்பதையும் மது பாட்டில்கள் கிடப்பதையும் போலிஸார் கண்டறிந்தனர். கொலை செய்தவர்கள் யார் என்ற அடையாளம் இதுவரை வெளியிடப்படவில்லை. இதுகுறித்து பேசிய ஆனந்த்புரா சர்க்கிள் இன்ஸ்பெக்டர் புஷ்பேந்த்ரா ” கொலை செய்யப்பட்டவரின் குடும்பத்தினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் அடையாளம் தெரியாத குற்றவாளிகள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. விரைவில் குற்றவாளிகள் சிக்குவார்கள்.” என தெரிவித்தார்.

```
```
https://twitter.com/lkantbhardwaj/status/1458322451708866562?s=20

“ராஜஸ்தானில் சட்டம் ஒழுங்கை காங்கிரஸ் தலைமயிலான அசோக் கெலாட் அரசு காற்றில் பறக்க விட்டுவிட்டது. தினமும் கொலை கொள்ளை கற்பழிப்பு என சமூக குற்றங்கள் பெருகிவருகின்றன. இதற்கு பொறுப்பேற்று காங்கிரஸ் பதவி விலக வேண்டும்” என எதிர்க்கட்சியினர் குரல் கொடுத்து வருகின்றனர்.

…..உங்கள் பீமா