1-12-21/5.43am
டெல்லி : பாரத பிரதமர் நிர்வாகத்தில் மட்டுமல்ல தான் அணிந்திருக்கும் உடைகளிலும் காலணிகளிலும் உன்னதத்தை விரும்புபவர். தற்போது அவர் அணிந்திருக்கும் ஷூவின் விலை அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது.
மத்திய பிஜேபி அரசின் நிர்வாகத்தில் எந்த குளறுபடியையும் காண முடியாத எதிர்க்கட்சிகள் மக்களிடையே வதந்திகளை ஒவ்வொன்றாக பரப்ப ஆரம்பித்தனர். அதில் சில முக்கியமான வதந்திகளையும் அதன் விளக்கத்தையும் காணலாம். முதல் புரளி மோடி தனக்கென ஒரு விமானம் சொந்தமாக வாங்கிவிட்டார். இது அரசுக்கு பெரிய இழப்பு. 18000 கோடி நிதி சுமை ஒரே விமானத்துக்கு என புரளியை கிளப்பி விட்டனர்.
அந்த ஏர் இந்தியா ஒன் என அழைக்கப்படும் அந்த நவீன ரக விமானம் நரேந்திர மோடி என்ற தனி நபருக்காக வாங்கப்பட்டது அல்ல. இந்திய பிரதமர் பாதுகாப்பாக பயணிக்கவும் குடியரசுத்தலைவர் பாதுகாப்பாக பயணிக்கவும் இந்திய அரசுக்காக வாங்கப்பட்டது. மேலும் மோடி அவர்களின் பதவிக்காலம் முடிந்த பின்னர் அவர் தனது சொந்த காரியங்களுக்காக இந்த விமானங்களை பயன்படுத்தவோ அல்லது தனக்கு சொந்தமாக்கிக் கொள்ளவோ எந்த உரிமையும் கிடையாது என்பது அறிந்துகொள்ள வேண்டிய ஒன்று.

மேலும் தைவான் காளான் வதந்தி திட்டமிட்டு பலரால் பரப்பப்பட்டு வருகிறது. மோடி அவர்களின் உணவில் கீரை மற்றும் ரொட்டி தவறாமல் இடம்பெற்றிருக்கும். அவரின் தொடர்ச்சியான யோகா வே அவரை சுறுசுறுப்பாக இயங்க வைக்கிறது. மேலும் பாரத பிரதமர் தற்போது அணிந்திருக்கும் ஷூ வகையிலான காலணியின் விலை ரூ.814. இது அமேசானில் கிடைக்கிறது.
…….உங்கள் பீமா