Wednesday, January 28, 2026
Home > செய்திகள் > மரணமடைந்தவர்கள் உடல்களை எடுத்து சென்ற போலீஸ் வாகனம் விபத்து…!?

மரணமடைந்தவர்கள் உடல்களை எடுத்து சென்ற போலீஸ் வாகனம் விபத்து…!?

9-12-21/14.30pm

நீலகிரி : நாட்டை உலுக்கிய ஹெலிகாப்டர் விபத்தில் அகால மரணம் அடைந்தவர்கள் உடல் வெலிங்டன் மருத்துவமனையில் இருந்து டெல்லிக்கு கொண்டு செல்லப்படுகிறது.

மேட்டூர் பகுதி மக்கள் மரணமடைந்த வீரர்கள் உடல்கள் செல்லும் வாகனத்தின் மீது மலர்கள் தூவி மரியாதை செய்தனர். மேலும் பலர் கண்ணீர் விட்டு கதறினர். இந்நிலையில் உடல்கள் சென்ற வாகனத்திற்க்கு பாதுகாப்பாக போலீஸ் வாகனங்கள் பந்தோபஸ்திற்க்கு சென்றன.

ஆம்புலன்ஸ் மற்றும் போலீஸ் பாதுகாப்பு வாகனங்கள் பார்லியார் மலைப்பகுதியில் செல்லும்போது ஒரு போலீஸ் வாகனம் விபத்தில் சிக்கியது. சிறுசிறு காயங்களுடன் காவலர்கள் தப்பியதாக சொல்லப்படுகிறது.

மேலும் தமிழக முதல்வர் ஸ்டாலின் மரணமடைந்த வீரர்களுக்கு வெலிங்டனில் அஞ்சலி செலுத்தினார்.

……உங்கள் பீமா