Friday, May 3, 2024
Home > செய்திகள் > தொழிற்சாலையில் தீவிபத்து மூன்று சிறுமிகள் உட்பட நான்குபேர் பலி..!

தொழிற்சாலையில் தீவிபத்து மூன்று சிறுமிகள் உட்பட நான்குபேர் பலி..!

30-1-22/19.00pm

ராஜஸ்தான் : ராஜஸ்தானில் இன்று ஏற்பட்ட தீவிபத்தில் மூன்று சிறுமிகள் உட்பட நான்குபேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் சிலர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் மாவட்டம் ஜாம்வா ராம்கர் பகுதியில் அமைந்துள்ளது தனியாருக்கு சொந்தமான டர்பென்டைன் ஆயில் கம்பெனி. இன்று மாலை ஏற்பட்ட தீவிபத்தில் தொழிற்சாலை குடியிருப்பு பகுதியில் தீ பரவியதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் மூன்று சிறுமி உட்பட நான்குபேர் பலியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து பேசிய சர்க்கிள் ஆபிசர் ஷிவ் குமார் ” விவசாயப்பகுதியில் நிர்மாணிக்கப்பட்டிருந்த அறையில் திடீரென தீ பிடித்திருக்கிறது. அதில்சிக்கிய நால்வர் உயிரிழந்துள்ளனர். இருவர் மேல்சிகிச்சைக்காக ஜெய்ப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்” என குறிப்பிட்டார். மேலும் இறந்த சிறுமிகள் தொழிற்சாலையில் வேலை பார்த்துவந்த தொழிலாளர்களின் குழந்தைகள் என அடையாளம் காணப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

`

மேலும் விசாரணை நடந்துவருவதாகவும் குறிப்பிட்டார். தீயணைப்பு வாகனங்கள் உடனடியாக வரவழைக்கப்பட்டு தீயை விரைவாக கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டதாக எஸ்.ஹெச்.ஓ செய்தியாளர்களிடம் தெரிவித்தார். தொழிற்சாலை உரிய அனுமதி பெற்று இயங்குகிறதா என அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

```
```

மேலும் இந்த தொழிற்சாலை காங்கிரஸ் பிரமுகர் ஒருவருக்கு சொந்தமானது என பொதுமக்களிடையே பேச்சு அடிபடுவது குறிப்பிடத்தக்கது.

…..உங்கள் பீமா