Friday, May 3, 2024
Home > செய்திகள் > என் வீட்டை இடியுங்கள்..! யோகி அரசுக்கு விண்ணப்பித்த நபர்

என் வீட்டை இடியுங்கள்..! யோகி அரசுக்கு விண்ணப்பித்த நபர்

3-4-22/10.50AM

உத்திரபிரதேசம் : உத்திரபிரதேச மாநிலம் ராம்பூர் மாவட்டத்தில் சட்டத்துக்கு புறம்பாக கட்டப்பட்ட தனது வீட்டை யோகி அரசு இடித்துவிடுமோ என பயந்து ஒருவர் விண்ணப்பித்தது பரபரப்பை கூட்டியிருக்கிறது.

ராம்பூர் மாவட்டத்தில் வசிப்பவர் நாற்பது வயதான எஹசான் மியான். இவர் தனது வீட்டை இடிக்குமாறும் முடிந்தால் அதை குறைக்குமாறும் BDM சௌத்ரிக்கு மனு கொடுத்துள்ளார். இதுகுறித்து மேற்கொண்டு அவர் கூறுகையில் ” இந்த வீட்டில் இரண்டு தலைமுறைகளாக வசித்து வருகிறோம். எங்கள் நில வரைபடத்தில் வக்பு மற்றும் அரசாங்கத்திற்கு சொந்தமான இடத்தில் வீடுகட்டியிருப்பதை சமீபத்தில் கண்டறிந்தேன்.

`

எனவே அதை இடிக்க மனுதாக்கல் செய்ய முடிவெடுத்தேன்” என கூறினார். BDM சௌத்ரி கூறுகையில் மயானம் மற்றும் குளங்களை ஆக்கிரமித்து மித்ரபுர் கிராமத்தில் வீடுகள் சில கட்டப்பட்டிருக்கின்றன. அவற்றை கண்டறியும்பணி தொடங்கியுள்ளது” என கூறினார்.

```
```

யோகி அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்ததிலிருந்து இதுவரை நூறுக்கும் மேற்பட்டோர் தங்கள் குற்றங்களை ஒப்புக்கொண்டு சரணடைந்துள்ளனர். மேலும் குற்றவாளிகள் தப்பியோடினால் அவர்கள் வீட்டின்முன் உடனே ஒரு புல்டோசர் நிறுத்தப்படுவதால் குற்றவாளிகள் பதுங்க பயப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

…..உங்கள் பீமா