Friday, May 3, 2024
Home > செய்திகள் > ஜெய்ஸ்ரீராம் என பதிவிட்ட முனாவர் அன்சாரி..! நான்கு வயது குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்

ஜெய்ஸ்ரீராம் என பதிவிட்ட முனாவர் அன்சாரி..! நான்கு வயது குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்

10-4-22/13.40pm

மத்தியபிரதேசம் : போபால் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் பிஜேபியை சேர்ந்த ராமேஸ்வர் ஷர்மா. இவரது பதிவு ஒன்றில் அவரது தீவிர ஆதரவாளரான முனாவர் அன்சாரிஜெய்ஸ்ரீராம் என பதிவிட்டார். அதையடுத்து அவரை அக்கம்பக்கத்தில் இருக்கும் சக இஸ்லாமியர்கள் தாக்கியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

போபால் கோகடா பகுதியில் வசிப்பவர் முனாவர் அன்சாரி. இவர் ஒரு தச்சு தொழிலாளி. இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் நான்கு வயதில் ஒரு மகள் இருக்கிறார். சம்பவத்தன்று அன்சாரி வீட்டருகே வசிக்கும் சொஹைல் என்பவன் அன்சாரியின் ஜெய்ஸ்ரீராம் என்ற முகநூல் பதிவை பார்த்துவிட்டு சமூகத்திற்கு துரோகம் செய்வதாகவும் ஹிந்து தலைவர்களை ஆதரிப்பதாகவும் சக இஸ்லாமியர்களிடம் கூறியுள்ளார்.

உள்ளூரை சேர்ந்த ரஹ்மத் மசூதியில் முனாவர் அன்சாரிக்கு பாடம் கற்பிக்க முடிவெடுக்கப்பட்டது. பின்னர் சொஹைல் தலைமையில் சாரிக் அன்சாரி, சுலைமான் உள்ளிட்ட 15 பேர் கொண்ட கும்பல் முனாவர் அன்சாரி வீட்டிற்குள் இரவு ஏழு மணியளவில் நுழைந்தது. பின்னர் அங்கிருந்த அன்சாரி அவரது மனைவி மற்றும் குழந்தைகளை தாக்கியுள்ளனர்.

`

வீட்டிலிருந்த பாத்திரங்களை வெளியே வீசியெறிந்துவிட்டு நான்குவயது குழந்தையை காலால் நசுக்க முயற்சித்ததாகக் கூறப்படுகிறது. மேலும் அவர்களை வீட்டை காலி செய்து வேறு இடத்திற்கு செல்லும்படி மிரட்டியதாகவும் சொல்லப்படுகிறது. இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் எம்.எல்.ஏ ராமேஸ்வர் இந்த தாக்குதலை பொறுத்துக்கொள்ள முடியாது. சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.

```
```

…..உங்கள் பீமா

pls follow us on https://news.google.com/publications/CAAqBwgKMP78qAsw8IfBAw?hl=en-IN&gl=IN&ceid=IN%3Aen