திரைப்பட இயக்குனரான மோகன் ஜி சத்ரியன் தனது படங்களை பெரும்பாலும் தானே சொந்தமாக தயாரித்து வெளியிட்டு வருகிறார்.இவரது முந்தைய படமான திரௌபதி நாட்டில் நடைபெறும் நாடக காதலை காட்டியது. அப்போதே அந்த திரைப்படம் பலத்த சர்ச்சையை கிளப்பியது.
விடுதலைச்சிறுத்தைகள் கட்சி நிறுவனரும் எம்பியுமான திருமாவளவன் இந்த திரைப்படத்தின் கருத்துக்களை வன்மையாக கண்டித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மோகன் ஜி சத்ரியன் தற்போது இயக்கியுள்ள திரைப்படமான ருத்ரதாண்டவத்தின் ட்ரைலர் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
இந்நிலையில் சிறுபான்மை நலக்கட்சி எனும் பெயரில் இயங்கும் ஒரு கிறித்தவ அமைப்பு தற்போது மோகன் ஜி சத்ரியனுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளது. அந்த படத்தின் ட்ரெய்லர் கிறித்தவ மதத்தினர் மனம் புண்படியாக இருப்பதாகவும், மேலும் தமிழகத்தில் மத மோதல் உருவாக்கும் விதத்தில் படம் எடுக்கப்பட்டிருப்பதாகவும்,
![](https://www.madrastelegram.com/wp-content/uploads/2021/09/ruthra1-750x1024.jpg)
அதனால் இன்று சென்னை மாநகர காவல்துறை இயக்குனரை சந்தித்து மோகன் ஜி சத்ரியனை கைது செய்ய கோரிக்கை வைக்கப்போவதாக அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும் ருத்ரதாண்டவம் படத்தை தடை செய்ய கோரிக்கை எழுப்ப போவதாகவும் அந்த அமைப்பின் தேசிய தலைவரான பேராயர் சாம் யேசுதாஸ் அறிவித்துள்ளார்.