Friday, March 29, 2024
Home > செய்திகள் > ஆந்திராவில் பரபரப்பு..! சிவன்கோவிலில் இறைச்சி..!

ஆந்திராவில் பரபரப்பு..! சிவன்கோவிலில் இறைச்சி..!

13-4-22/16.00PM

ஆந்திரா : இந்தியாவெங்கும் கோவில்களின் அருகில் இறைச்சி விற்பனை நிலையம் தொடங்கப்பட்டு வருகிறது. இது கோவிலுக்கு தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு பெரும் வேதனையை கொடுத்துள்ளது. கோவில்களின் அருகில் குறிப்பிட்ட தொலைவு வரை மாமிச விற்பனைநிலையம் அல்லது அசைவ உணவு விடுதி எதுவும் அமைக்க கூடாது என இந்திய அரசியலமைப்பு சட்டம் எடுத்துரைக்கிறது.

இருந்தபோதும் அதை எந்த ஒரு மாநில அரசும் கடைபிடிப்பதாக தெரியவில்லை என பக்தர்களால் விமர்சிக்கப்படுகிறது. இந்நிலையில் ஆந்திரமாநிலம் பெட்டகக்கனி பகுதியில் அமைந்துள்ள புராதன மல்லேஸ்வரர் கோவில் வளாகம் அருகே இறைச்சி விற்பனை நிலையம் ஒன்று அமைக்கப்பட்டது. இதை எதிர்த்து பக்தர்கள் போராட்டம் நடத்தினர். மேலும் மல்லேஸ்வரா திருக்கோவில் கேன்டீனில் மாமிசம் சமைக்கப்பட்டதாக தெரிகிறது.

`

மேலும் கடந்த சிலநாட்களுக்கு முன்னர் தெலுங்குதேசம் பார்ட்டி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் துளிபல்லா நரேந்திரன் மற்றும் தொண்டர்கள் EO அலுவலகத்தின்முன்பு இறைச்சிக்கடையை அகற்றக்கோரி போராட்டம் நடத்தினர். இதைத்தொடர்ந்து வருவாய்த்துறை அலுவலர் உத்தரவின்பேரில் துளிபல்லா நரேந்திரன் உட்பட 92பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

```
```
துளிபல்லா நரேந்திரன்

மற்றொருபுறம் குண்டூர் பகுதியில் பிஜேபியினர் அறநிலையத்துறை அலுவலகம் முன்பு சாலைமறியலில் ஈடுபட்டனர். மேலும் கோவில் கேன்டீனில் அசைவம் சமைத்தற்காக அந்த ஒப்பந்தக்காரரை நீக்கவேண்டும் என வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

……உங்கள் பீமா