Sunday, May 5, 2024
Home > செய்திகள் > சூனியம் வைத்த பேங்க் கொள்ளையன்..! அலறிய போலீஸ்..!

சூனியம் வைத்த பேங்க் கொள்ளையன்..! அலறிய போலீஸ்..!

கேரளா : டென் ஆப் தீவ்ஸ், பெலகாம் 123, இத்தாலியன் ஜாப், ட்ரான்ஸ்போர்ட்டர் என நூதனதிருட்டுகளை மையமாக கொண்ட பல ஹாலிவுட் திரைப்படங்களை பார்த்திருப்போம். அதில் வரும் மயிர்கூச்செறியும் சம்பவங்கள் போலல்லாமல் இந்தியாவில் உள்ள திருடர்கள் எளிதான முறையில் நூதனமாக திருடிவருகின்றனர்.

அப்படி ஒரு சம்பவம் கேரளாவில் நடைபெற்றுள்ளது. கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டம் ஜனதா ஜங்ஷன் பதான்புரத்தில் பதன்புரம் பேங்கர்ஸ் எனும் தனியார் நிறுவனம் இயங்கிவருகிறது. இந்த நிறுவனத்தில் புகுந்த கொள்ளையர்கள் இரண்டு லாக்கர்களில் வைக்கப்பட்டிருந்த முப்பது லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் நாலு லட்சம் ரொக்கப்பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.


`

இந்த திருட்டு குறித்து அந்த நிறுவனத்தின் உரிமையாளர் ராமச்சந்திர நாயர் போலீசில் புகாரளித்தார். புகாரின் அடிப்படையில் நிறுவனத்திற்கு வந்து பார்த்த காவல்துறையினர் அரண்டுபோயினர். லாக்கர்களுக்கு அருகில் சாமி படத்தை வைத்து அதனருகே மது பாட்டில் மனித முடி எலுமிச்சை, சுண்ணாம்பு, மஞ்சள் கயிறு ஒரு சிறிய ஈட்டி என பல உபகரணங்களை வைத்து சூனியம் செய்துள்ளனர்.

```
```

அதோடு நில்லாமல் போலீசாருக்கு மிரட்டல் கடிதமும் வைத்துவிட்டு சென்றுள்ளனர். அந்த கடிதத்தில் “நாங்கள் மிகவும் ஆபத்தானவர்கள். எங்களை பின்தொடரவேண்டாம். நாங்கள் சூனியம் வைத்துள்ளோம்” என மிரட்டல் விடுத்துள்ளனர். கொல்லம் காவல்துறை அதிகாரிகள் சிலர் இதெல்லாம் எங்களுக்கு தேவையா என புலம்பிவருகின்றனர்.



மேலும் மூன்றுமாடி கட்டிடமாக அமைந்துள்ள இந்நிறுவனத்தில் மேற்கூரை வழியாக நுழைந்து அங்கிருந்த க்ரில் கேட்டுக்களை உடைத்து உள்ளே நுழைந்து திருடியுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.